பாஜக தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் காங்கிரஸ், NCP ஆதரவுடன் மகாராஷ்டிராவில் அரசமைப்பது குறித்து பரிசீலிப்போம் என சிவசேனா அதிரடி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவிக்கு அரசியல் முட்டுக்கட்டை தொடர்ந்த நிலையில், சிவசேனா 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாகக் கூறியதுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு கட்சி மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற பிஜேபி தவறிவிட்டதை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக-சிவசேனா இடையேயான இழுபறி தொடருகிறது. இதனால் அம்மாநிலத்தில் புதிய அரசு அமையவில்லை. மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் பகிர வேண்டும் என்பது போன்ற சிவசேனாவின் கோரிக்கைகளை பாஜக ஏற்க மறுத்துவிட்டது. இதனால் மராட்டியத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில், சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்க கட்டுரையில், சிவசேனா முதலில் இறங்கி வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யார் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது என்பது குறித்து வரும் நாட்களில் நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்" என கூறினார்.



மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியுமா, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பாஜகவால் நிரூபிக்க முடியுமா எனவும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. 54 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சில சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை சிவசேனாவால் பெற முடியும் என்றும் சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனிடையே, மராட்டியத்தில் அரசு அமைக்க சிவசேனாவுக்கு தங்களது கட்சி ஆதரவு அளிக்கும் என்பதை தேசியவாத காங்கிரஸ் சூசகமாக தெரிவித்துள்ளது. அக்கட்சி செய்தித் தொடர்பாளர் நவால் மாலிக், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், பாஜக இல்லாமல் மக்கள் அரசை அமைக்கும் திட்டத்துடன் சிவசேனா வந்தால், சரத் பவார் சாதகமான முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், (முன்னாள் பிரதமர்) அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் அரசாங்கத்தை நடத்திய விதம், எல்லோரும் இதேபோல் முன்னேற வேண்டும். இது மகாராஷ்டிராவின் நலன்களாக இருக்கும், ”என்று கட்சி தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், சிவசேனா ஆட்சி அமைக்க 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இது 175 ஆகவும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என கூறியிருப்பது அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.