Anemia : ரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாடு. இந்த நிலை ஆங்கிலத்தில் அனிமியா என அழைக்கப்படுகிறது.உடலில் ரத்த சோகை ஏற்பட்டால், பல கடுமையான நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே உடலில் இரும்புச் சத்து குறைபாடு என்னும் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலில் ரத்தம் இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில் சில கெட்ட பழக்க வழக்கங்கள், ரத்த சோகைக்கு காரணமாகின்றன என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது உடலில் செல்களில் ஆக்ஸிஜனை வழங்கும் வேலையை இரத்த சிவப்பு அணுக்கள் செய்கின்றன. எனவே இரத்த சோகை காரணமாக, உடலுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடலில் அதிக சோர்வும் பலவீனமும் (Health Tips) ஏற்படும்.


ரத்த சோகை நோய்க்கான அறிகுறிகள்


காரணமே இல்லாமல் மிகவும் பலவீனமாக உணர்தல், அடிக்கடி மயக்கம் ஏற்படுதல், ஏதேனும் கொஞ்சம் வேலை செய்தாலே சோர்வாக உணர்தல்,  சுவாசிப்பதில் சிரமம் அல்லது அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுதல், கை கால்கள் குளிர்ச்சியாக இருத்தல் ஆகியவை இரத்த சோகை நோய் உள்ளதற்கான அறிகுறிகள்.


ரத்த சோகைக்கு காரணமாகும் சில பழக்கவழக்கங்கள்


புகை பிடிக்கும் பழக்கம்


புகை பிடிக்கும் பழக்கத்தால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இது ரத்த அணுக்களின் உற்பத்தியை பாதித்து, ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல புகை பிடிப்பதன் காரணமாக, நுரையீரல் பாதிக்கப்படும். இதய ஆரோக்கியத்திற்கும் புகை பிடிக்கும் பழக்கம் பெரும் தீங்கு விளைவிக்கும்.


மது அருந்தும் பழக்கம்


குடி குடியை கெடுக்கும் என்பார்கள். அளவிற்கு அதிகமான மது கல்லீரலை பாதிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அது ரத்த சோகை ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. அளவிற்கு அதிகமான மது, இதயம், கனையா ஆரோக்கியம் ஆகியவற்றையும் பாதிக்கிறது. ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.


ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்


நாம் உண்ணும் உணவிற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியம் அற்ற உணவு உடலை சல்லடையாக தொலைத்து விடும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக ரத்த சோகை ஏற்படும். அதோடு உடல் பலவிதமான நோய்களின் ஆகிவிடும். ரத்த சோகையை நம்மால் எளிதில் கடந்து போக முடியாது. ஏனெனில் உடலுக்கு கடும் சோர்வை கொடுத்து, நம் செயல்திறனை முடக்கும் ஆபத்தைக் கொண்டது ரத்த சோகை.


மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்


மோசமான வாழ்க்கை முறை


நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, பசிக்கும்போது உண்ணாமல் டீ காபி அருந்துவது போன்ற பழக்கங்கள், உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.ரத்த சோகை ஏற்படாமல் இருக்க வாழ்க்கை முறை சிறப்பானதாக இருக்க வேண்டும். அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பல வகைப்பட்ட காய்கறிகள் பழங்கள், தானியங்கள் என அனைத்து வகையான உணவுகளும் டயட்டில் சேர்க்கப்பட வேண்டும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ