Arisi Kanji or Boiled Rice Water Benefits: இந்தியா முழுவதும் அரிசி உணவுகள் சாப்பிடாத மாநிலங்களை கான்பது அரிது. குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி பிரதான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரிசியை சமைத்த பிறகு வடிகட்டினால் கிடைக்கும் கஞ்சி உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும். சாதம் வடித்த கஞ்சியின் எண்ணற்ற நன்மைகள் அறியாத நம்மில் பலர், அதனை தூக்கி எற்ந்து விடுகின்றோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் உடலுக்கு எண்ணற்ற  ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட அமிர்தமாக இருக்கும் கஞ்சி தற்போது பிரபலமடைந்து வருகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த எளிய அரிசி கஞ்சி பல நூற்றாண்டுகளாக பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக (Health Tips) பயன்படுத்தப்படுகிறது.


மலச்சிக்கல் - மூல நோய்க்கு மருந்தாகும் கஞ்சி: 


வயிறு தொடர்பான பிரச்சனைகள் அல்லது நோய்கள், குறிப்பாக மலச்சிக்கல், மூல நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிப்பவர்களுக்கு அரிசி கஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு பைல்ஸ் அல்லது மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், நீங்கள் அர்சி கஞ்சியை கட்டாயம் குடிக்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.


காய்ச்சலில் நன்மை பயக்கும் அரிசி கஞ்சி:


முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அரிசி  கஞ்சி குடிக்கும் போக்கு இருந்தது. இதன் காரணமாக, உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடும் ஈடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்கும். 


மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை குறைச்சு எடை போடாதீங்க...!


இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் கஞ்சி:


அரிசியில் சோடியத்தின் அளவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக அதன் கஞ்சி உயர் இரத்த அழுத்தம் குறைக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, அரிசி கஞ்சியை உதாசீனப்படுத்தாமல் குடிக்கவும்.


சருமத்திற்கு நன்மை பயக்கும் சாதம் வடித்த கஞ்சி:


சாதம் வடித்த கஞ்சி சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த நீர் ஆறியதும், அதைக் கொண்டு முகத்தில் தடவி, சிறிது நேரம் விட்டு, பின் முகத்தைக் கழுவவும். அல்லது பஞ்சை கஞ்சியில் தோய்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.


மாதவிடாய் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் கஞ்சி:


மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கும் பெண்களுக்கு, அரிசி கஞ்சி இயற்கையான தீர்வாக இருக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. அரிசி கஞ்சி, தசைச் சுருக்கங்களைத் தணிக்கவும், மாதவிடாயின் போது வலியைக் குறைக்கவும் உதவும். எனவே நீங்கள் அசௌகரியத்தை உணரும்போது, ​​நிவாரணம் பெற ஒரு கப் வெதுவெதுப்பான அரிசி கஞ்சியைக் குடிக்கவும்.


நீர்ச்சத்தை கொடுத்து ஆற்றலை அதிகரிக்கும் கஞ்சி:


நோய்வாய் பட்டிருந்தால் ஏற்படும் சோர்வு அல்லது உடல் பயிற்சிக்கு பிறகு ஏற்படும் நீர்சத்து இழப்பை ஈடுசெய்ய ரீஹைட்ரேட் செய்வது அவசியம். இதை கோடையில் குடிப்பதன் மூலம், வியர்வையால் இழக்கப்படும் எலக்ட்ரோலைட்டுகள், அரிசியைப் போலவே, அதன் மாவுச்சத்தும் உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உபாதைகள் ஏற்பட்டால்,  அரிசி கஞ்சியை குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ