இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலானோர், நோய்களின் பிடியில் சிக்கியுள்ளனர். அதில் ஒன்று கொல்ஸ்ட்ரால். இதய நோய்களின் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கும் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், அலோபதி சிகிச்சைகளை மட்டுமே நம்பி இல்லாமல், பாரம்பர்யம் மிக்க ஆயுர்வேத உணவுகளை எடுத்துக்கொள்ளவதில், இன்று பலர் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில், மருத மர பட்டையின் மகிமை ஆயுர்வேதத்தில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையின் கஷாயம் பல வகையான நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மருத மர பட்டைகளில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது நம் உடலை பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத மர பட்டையின் கஷாயம் உங்களுக்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். மருத மர பட்டையில் காணப்படும் ட்ரைடர்பெனாய்டு இரசாயனம் இதய நோய்களுக்கு அருமருந்தாக கருதப்படுகிறது. இது தவிர, அதிக இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது நமது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் ரத்த அழுத்தமும் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதயத் தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்கும் போது, ​ இதய அடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் தாக்குகின்றன. நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், தமனிகள் சுருங்க ஆரம்பித்து, இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் இதயத்திற்கு சரியாகச் சென்றடையாமல் போகும். இதனால் மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மாரடைப்பு கூட ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற மருதமரப் பட்டையை நீங்கள் பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் மருத மரபட்டைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த மருத மரப் பட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்?


மருத மரப்பட்டையின் மருத்துவ குணங்கள்


மருதமரப்பட்டை ஆயுர்வேதத்தில் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய், கெட்ட கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு மருதாக இருக்கும், இதில் எலாஜிக் அமிலம், பீட்டா-சிட்டோஸ்டெரால், மோனோகார்பாக்சிலிக் அமிலம் உள்ளன. அர்ஜுன மரப் பட்டை எனவும் அழைக்கப்படும் இதில் உள்ள ஹைபோலிபிடெமிக் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!


மருதமரப் பட்டை மற்றும் இலவங்கப்பட்டை தேநீர்:


கெட்ட கொலஸ்ட்ரால் நோயாளிகள் மருத்துவ குணங்கள் நிறைந்த மருத மரப் பட்டையை டீ அல்லது கஷாயமாக சாப்பிடலாம். முதலில் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கேஸை ஆன் செய்து கொதிக்க வைக்கவும். இப்போது இந்த நீரில் 2 முதல் 3 கிராம் மருதமரப் பட்டை மற்றும் 1 முதல் 2 கிராம் இலவங்கப்பட்டை சேர்த்த பொடியை கலக்கவும்.  தண்ணீர் வற்றி ஒரு கப் நீர் இருக்கும் போது, ​​அடுப்பை அணைத்து விடவும். இந்த  கஷாயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, உடலில் கொழுப்பின் அளவைப் பராமரிப்பதோடு, புற்றுநோய் போன்ற நோய்களையும் தடுக்கிறது.


மருதமரப் பட்டை கஷாயத்தினால் கிடைக்கும் பிற நன்மைகள்


மருதமரப் பட்டை இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பிபியும் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், பலவீனமான எலும்புகளை பலப்படுத்துகிறது. செரிமானத்தையும் மேம்படுத்தும். வாய் புண் மற்றும் மூட்டுவலி உள்ள நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம்.


பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் வீட்டு மருத்துவம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.   


மேலும் படிக்க | இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ