Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர், அனைவராலும் விரும்பப்படும் ஒரு உனவாக உள்ளது.  ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை.  
 
சுவையில் சிறந்த பனீர் சாப்பிட விரும்பாத சைவ உணவு பழக்கம் உள்ளவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால்,  பன்னீரை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடித்தால், முழுமையாக அதன் ஊட்ட சத்துக்களை பெற முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலருக்கு, பன்னீரை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது பொரித்தால் நல்லதா என்ற குழப்பம் உள்ளது. 
பன்னீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.


பன்னீரில், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ள நேரத்தில், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன. பன்னீர் உட்கொள்வதால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதற்கு இதுவே காரணம்.


சமைப்பதால் சில சத்துக்கள் இழக்கப்படுகின்றன என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் பனீரை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இரண்டு வகையிலும் பன்னீர் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பன்னீரை சமைக்கும் போது, அதில் உள்ள சில சத்துக்கள் அழிந்துவிடும். இதன் காரணமாக நீங்கள் அதன் பலன் முழுமையாக கிடைக்காது.


மேலும், பன்னீரில் ஏராளமான புரதங்களும் நல்ல கொழுப்புகளும் உள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் எலும்புகள் வலுவடையும். மேலும், எடையும் கட்டுக்குள் இருக்கும்.


ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!



சாப்பிடும் முன் பேக் செய்யப்பட்ட பனீரை சுத்தம் செய்ய வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் வீட்டிலேயே பன்னீர் தயாரிக்கிறீர்கள் என்றாலும்ன் சரி, அல்லது நல்ல தரமான பன்னீர் வாங்கி வந்தாலும் சரி, அதை பச்சையாகவே சாப்பிடலாம். மறுபுறம், நீங்கள் கடையில் பேக் செய்யப்பட்ட பனீரை வாங்கியிருந்தால், அதை பச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து சுத்தம் செய்வது நல்லது.


ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!


பேக் செய்யப்பட்ட, சில நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதால், அதில் அழுக்கு அல்லது பாக்டீரியா வளரும் அபாயம் உள்ளது. அதனால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்த பிறகு, பன்னீரை எடுத்துப் பயன்படுத்தலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான கருத்துக்களௌஇ அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதனை அங்கீகரிக்கவில்லை.)


ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR