இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டுக் குறிப்புகள்: நீரிழிவு நோய் இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நோயாக உள்ளது. இந்தியாவில் இந்த நோயால் மிக அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனிப்பு மட்டுமல்ல, இன்னும் பலவற்றை தங்கள் உணவில் தவிர்க்க வேண்டும். இந்த நோய் ஒருமுறை வந்தால், அதற்கு முழுமையான தீர்வு கிடையாது என்பது தான் வேதனையான உண்மை. இருப்பினும், மருந்துகள் மற்றும் உணவுமுறையின் உதவியுடன் கண்டிப்பாக இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயை பல வகையான எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுகுள் வைக்க சுலபமான ஐந்து வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த எளிய வீட்டு வைத்தியம்:


பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுங்கள்


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அதாவது உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் பச்சை காய்கறிகள், கீரைகளை அதிக அளகவில் உட்கொள்ள வேண்டும். வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், சுரைக்காய், பாகற்காய் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை இதில் அடங்கும். இவற்றை உண்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.


முழு தானியங்களை சாப்பிடுவதன் நன்மைகள்


சர்க்கரை நோயை கடுப்படுத்த முழு தானியங்களை உட்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், இதை மதிய உணவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த வழையில் அது எளிதில் செரிமானமாகும். நீங்கள் உங்கள் விருப்பப்படி பார்லி மாவு ரொட்டி, தவிடு ரொட்டி அல்லது முழு தானிய ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது பலப்படுத்துகிறது.


மேலும் படிக்க | இந்த மசாலா 'மேஜிக்' டீ கைவசம் இருந்தால் போதும், சுகர் ஏறவே ஏறாது 


தயிர் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்


உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படுத்தப்படும். வேண்டுமானால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்தும் தயிரை சாப்பிடலாம். அல்லது எதுவும் சேர்க்காமலும் சாப்பிடலாம்.


வெங்காய சாறை தினமும் குடிக்கவும்


இந்த நோயை சமாளிக்க தினமும் 2 வெங்காயத்தின் சாற்றை குடிப்பது நல்லது என நீரிழிவு நோய் கட்டுப்பாட்டு குறிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்தவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், உடலில் அதிகரித்த இரத்த சர்க்கரை உடனடியாக கட்டுக்குள் வரும். இந்த சாற்றை குடிப்பதால் முடி வளர்ச்சியும் மேம்படும்.


முட்டையால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் 


முட்டையை உண்பவர்கள், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட சில நன்மைகளைப் பெறுகிறார்கள். முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் புரதத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உயர் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டைகளை உட்கொள்வது அதிக நன்மை பயக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் டீ குடிப்பதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ