முட்டைக்கோஸில் பல ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது நோய்களிலிருந்து பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்த முட்டைக்கோஸில் காணப்படும் நாடா புழு உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமையலாம். அதில் காணப்படும் ஒரு புழு மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதனால்தான் முட்டைகோஸ் சாப்பிடுவதை பலரும் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். முட்டைக்கோசில் காணப்படும் இந்த நாடாப்புழு எங்கிருந்து வருகிறது, இது ஏன் மிகவும் ஆபத்தானது மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது? இதையெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முட்டைக்கோஸில் (Cabbage) காணப்படும் நாடாப்புழுக்கள் மற்றும் மக்களின் மூளையில் அதன் அபாயகரமான தாக்கம் உலகின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், இந்தியாவில் இந்த பாதிப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த நாடாப்புழு தொற்று  ஏற்பட்ட விலங்குகளின் மலத்தில் காணப்படும் புழுக்களால் பரவுகிறது. பச்சை காய்கறிகளில் (Green Vegetables) முட்டைக்கோஸில் உள்ள நாடாப்புழு  பல முறை கழுவிய பிறகும் அகலுவதில்லை


நாடாப்புழுக்கள் குடல் மற்றும் மூளையைத் தாக்குகின்றன. பொதுவாக, குடல் மீதான தாக்குதலை விட, மூளையை தாக்கினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிக அதிகம். நமது குடல் மற்றும் மூளையை அடைந்த பிறகு, இந்த புழுக்கள் அங்கு முட்டைகளை இடுகின்றன, அவை உடல் முழுவதும் பரவி தொற்றுநோயைப் பரப்புகின்றன. உடலில் அவற்றின் இருப்பது ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவது மிகவும் கடினம். தொற்று முற்றீய பிறகே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. அதன் முக்கிய அறிகுறிகள் கடுமையான தலைவலி, பலவீனம், சோர்வு, வயிற்றுப்போக்கு, பசியின்மை, உடலில் ஊட்டச்சத்துக்கள் திடீரென குறைவது ஆகியவை.


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


நாடாப்புழு உடலில் எவ்வளவு ஆபத்தான முறையில் வளர்கிறது. அதன் நீளம் 3.5 செ.மீட்டர் வரை இருக்கலாம். வயது வந்த நாடாப்புழுக்கள் 25 செ.மீட்டர் நீளம் வரை வளரும். நாடா புழு 30 ஆண்டுகள் வரை வாழலாம். மூளையில் நாடாப்புழு தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு சில சமயங்களில் நோயாளி உயிரைக் கூட இழக்க நேரிடும். சிகிச்சைக்காக, நோயாளிக்கு மருந்துகள் கொடுப்பதோடு, அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது.


முட்டைக்கோஸ் உட்பட அனைத்து பச்சை காய்கறிகளையும் நன்கு கழுவவும். சுத்தமான இடத்தில் வைக்கப்பட்ட பொருட்களை மட்டுமே சாப்பிடுங்கள். பச்சையாக அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால் நாடாப்புழு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தவிர்க்கவும். நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிடவும்.


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR