கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி   பயன்பாட்டில் உள்ள நிலையில்,  ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த நேற்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI)  இன்று அனுமதி வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10 கோடி டோஸ் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம்  ஒப்பந்தம்  (Dr Reddy's) செய்துள்ளது.


சில நாட்களுக்கு முன் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி  தீபக் சப்ரா, ஸ்பூட்னிக் -5 தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்காக டாக்டர் ரெட்டீஸ்  (Dr Reddy's) 'ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்துடன்' ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார்.


மற்ற தடுப்பூசிகளை போல, 2 முறை செலுத்த வேண்டிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பநிலையில் வைத்திருக்க வேண்டும். 


ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா (Russia), கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


ALSO READ | Sputnik V தயாரிக்கும் பெங்களூரு நிறுவனம்; COVID தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறும் இந்தியா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR