Diabetes Control Tips: நீரிழிவு நோய் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இது ஒரு தீவிர நோயாக கருதப்படுகின்றது. இதில் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கின்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த சர்க்கரை அளவு


நமது உடல் ஆற்றலுக்காக உணவில் இருந்து குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தால், உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடிவதில்லை. அல்லது, இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் போகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வேகமாக அதிகரிக்கிறது.


உடல்நலப் பிரச்சினைகள்


இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், பார்வை கோளாறு  மற்றும் நரம்பு பாதிப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய்க்கு சிகிச்சை இல்லை, எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளால் இதைக் கட்டுக்குள் வைக்கலாம். பல இயற்கையான வழிகளிலும் சுகர் அளவை குறைக்க முடியும். 


மசாலா பொருட்கள்


நாம் தினசரி பயன்படுத்தும் சில மசாலாக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.  நீரிழிவு நோயாளிகள் தூங்கும் முன் சில மசாலாக்களை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அப்படிப்பட்ட 5 மசாலாப் பொருட்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 


1. ஓம நீர்


ஓம நீரில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள்அதிகமாக உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவியாக உள்ளன. இது தவிர ஓம நீர் செரிமானத்தை மேம்படுத்தவும் உடல் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றது. 


2. கிராம்பு நீர்


கிராம்பில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இது இன்சுலின் சென்சிடிவிடியையும் மேம்படுத்துகிறது. இதில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. 


3. சீரக நீர்


சீரகம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. இது செரிமானத்தை சீராக்கி, எடை குறைக்கவும் உதவுகிறது.


மேலும் படிக்க | கண்களுக்கு கீழ் இருக்கும் கரு வளையத்தை நீக்க..‘இந்த’ 7 பழங்களை சாப்பிடுங்க!


4. வெந்தய நீர்


வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இது உணவின் செரிமானத்தை மெதுவாக்கி இரத்தத்தில் குளுக்கோஸின் வெளியீட்டையும் குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம். 


5. இலவங்கப்பட்டை நீர்


இலவங்கப்பட்டையில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இன்சுலினுக்கு செல்களின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தி, குளுக்கோஸின் பயன்பாட்டை அதிகரிக்கிறது. இலவங்கப்பட்டை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. 


இந்த மசாலாப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது?


- இந்த மசாலாப் பொருட்களை தூள் வடிவிலோ அல்லது தேநீரில் சேர்த்தோ உட்கொள்ளலாம்.
- தூளாக பயன்படுத்தினால், இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில். இவற்றில் ஏதாவது ஒரு மசாலாவின் தூளை கலந்து குடிக்கலாம்.
- இது தவிர அன்றாட சமையலிலும் இந்த மசாலாப் பொருட்களை பயன்படுத்தலாம்.


இவற்றில் கவனம் தேவை:


- இந்த மசாலாப் பொருட்களை உட்கொள்ளத் தொடங்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 


- இந்த மசாலாப் பொருட்களால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக இவற்றை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்


- இந்த மசாலா பொருட்கள் நீரிழிவு மருந்துகளுக்கு மாற்று அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | Dengue: பிளேட்லெட் எண்ணிக்கை, காய்ச்சல், உடல் வலி... அத்தனைக்கும் ஒரே இலையில் தீர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ