கோவிட்-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நான்காவது அலை குறித்த பீதி மக்கள் மத்தியில் பரவி வருகிறது. பெற்றோருக்கு உள்ள முக்கிய கவலை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரியவர்களைப் போல் அல்லாமல், கோவிட்-19 க்கு எதிரான செயற்கை நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.மேலும் நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.


டெல்லி சுகாதாரத் துறையின் சமீபத்திய தில்லி பேரிடர் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உடன் நடத்திய கூட்டத்தில் தேசிய தலைநகரில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரான் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


1. உங்கள் குழந்தைகள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு சிறந்த, மேம்படுத்தப்பட்ட, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாஸ்க் அணிந்து செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு, மாஸ்க் மட்டுமே வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்கான ஒரே நம்பிக்கை. அது நன்றாக பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்.


2. வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் ஒரு பொறுப்புள்ள பெற்றோராக ஒருவர் செய்யக்கூடியது அவசரத் தேவைகளுக்குத் தயாராக வேண்டும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த சந்தேகம் ஏற்பட்டால், தொற்று ஏற்பட்டிருக்குமே என நினைத்தால், முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யவும்.


3. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உடலை விட பாதுகாப்பானது எதுவும் இல்லை. அதை அடைய, பல அத்தியாசிய வைட்டமின்களை, நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கிய ஊனவை கொடுங்கள். வீட்டில் சமைத்த சத்தான உணவு அவர்களை தொற்றில் இருந்து காக்கும்.


 4. உங்கள் குழந்தை அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களையும், குறிப்பாக வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை வழங்குவதன் மூலம் ஓமிக்ரானில் இருந்து முழுமையாக பாதுகாக்கலாம். 


மேலும் படிக்க | கொரொனா 4வது அலை அச்சம்; மாஸ்கை கட்டாயமாக்கியுள்ள தில்லி அரசு


5. ஒரு முழுமையான பரிசோதனை மூலம் உங்கள் குழந்தையிடம் உள்ள ஆரோக்கிய குறைபாடு அறிந்து கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் தடுப்பதற்கும் உங்கள் குழந்தையின் உடலைத் தயார்படுத்துவது எளிதாக இருக்கும்.


6. காய்ச்சல் உட்பட அனைத்து வழக்கமான தடுப்பூசிகளை மறக்காமல் போடுவது மிக அவசியம். ஒமிக்ரான் உடலில் காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே வழக்கமான தடுப்பூசிகள் வைரஸை எதிர்த்துப் போராட உங்கள் குழந்தையின் உடலை பலப்படுத்தலாம்.


7. குழந்தைகளில் ஒமிக்ரான் தொற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த கருவி வைரஸ் தொற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து அவர்களுக்கு கற்பிப்பதே. சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைககளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கவும்.மாஸ்குகளின் சரியான பயன்பாடு, சமூக விலகல், சானிடைசர்கள் மற்றும் கிருமிநாசினிகளின் பயன்பாடு ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.


மேலும் படிக்க | இந்தியாவில் எகிறும் தொற்று பாதிப்புகள்; அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள மத்திய அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR