நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.  சுறுசுறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ரோலர் பிளேடிங், ஸ்கிப்பிங், ஜாகிங், நீச்சல் அல்லது ஏதேனும் உடல்சார்ந்த ஒரு விளையாட்டில் ஈடுபடுவதும் உடற்பயிற்சி என்றே கருதப்படுகிறது.  இவ்வாறு செய்வதால் அவர்களது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்து உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.  எடை மேலாண்மை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும், உயரத்திற்கு தகுந்த எடையுடன் ஒருவர் இருப்பதே ஆரோக்கியமான எடை எனப்படுகிறது.  உடல் எடையை குறைக்க டயட் மற்றும் தினசரி உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.  உடல் எடையை குறைக்க பட்டினி இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு சீர்குலைத்துவிடும்.  அதனால் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பொதுவாக உணவில் ஒரு ஒழுங்கான முறையை கடைபிடிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் குறைந்த கொழுப்பு உணவுகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை  உட்கொள்ள வேண்டும்.  அதேபோல ஒரே நேரத்தில் மிக குறைவான உணவையோ அல்லது அதிகமான உணவையோ சாப்பிடக்கூடாது, இது உங்கள் ரத்த சர்க்கரையை பாதிக்கும்.  நீரிழிவு நோயாளிகள் முழு தானிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும், அதிக பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.  நூடுல்ஸ், பர்கர்கள், பீட்சா, பேஸ்ட்ரிகள் மற்றும் சீஸ் போன்ற அதிக கொழுப்புள்ள  உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.  சிப்ஸ், பேஸ்ட்ரிகள், கிரிஸ்ப்ஸ், சமோசா மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.  


மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க



இரவு உணவிற்கு நான்கு சப்பாத்திகள் எடுத்து கொள்ளலாம், அதனை இரண்டு வேலை உணவாக பிரித்து 2 சப்பாத்திகள் என்று சாப்பிட வேண்டும்.  மேலும் இரவு உணவிற்கு தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் வான்கோழி போன்ற ஒல்லியான இறைச்சிகளை சாப்பிடலாம்.   அதேசமயம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், வறுத்த இறைச்சிகளை தவிர்க்கவும் அதற்கு பதிலாக நீராவியில் வேகவைத்து சமைத்த இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும்.  மேலும் நீரிழிவு நோயாளிகள் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோய் மன அழுத்தத்தால் ஏற்படுவதாக கூறப்படுகிறது, அதாவது மன அழுத்தத்தால் ரத்த அழுத்தம் உயர்ந்து மன அழுத்த ஹார்மோன்கள் காரணமாக ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.  ரத்த குளுக்கோஸ் அளவு கணிசமாக உயர்ந்து கூடுதலாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது.  மன அழுத்தத்தை குறைக்க தினம் இரவில் எட்டு மணிநேர தூங்குங்கள் இதுதவிர படம் பார்ப்பது, இசை கேட்பது, ஸ்டாண்ட்-அப் காமெடி பார்ப்பது, உடற்பயிற்சி என எதையாவது செய்யலாம்.


மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ