சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குறிப்புகள்: வேலைப்பளு, மோசமான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இன்றைய காலத்தில் பலருக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாயம் அதிகரித்துள்ளது. அதில் ஒன்று சர்க்கரை நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நொயால் பாதிக்கப்பட்டால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான பசி, வியர்வை, அமைதியின்மை போன்ற பல அறிகுறிகள் காணப்படுகின்றன. இது மட்டுமின்றி, சர்க்கரை நோய் தீவிர இதய நோயையும் உண்டாக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால், நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே நிறுத்தினால், நம் உடலை பல நோய்களில் இருந்து காப்பாற்றலாம். ஆனால் நீரிழிவு நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. சில உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.


நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். நாம் நமது தினசரி உணவில் உட்கொள்ளும் சில உணவுகள் இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றை உண்ணாமல் இருப்பது மிக அவசியமாகும். 


மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சமா? இந்த 'டிப்ஸ்' மூலம் அதை தடுக்கலாம் 


காபியும் நீரிழிவு நோயும்


பலர் தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்க விரும்புகிறார்கள். காபி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். காஃபினின் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தால், அதற்கு பதிலாக பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிக்கலாம். 


அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட பழங்களும் நீரிழிவு நோயும்


வாழைப்பழங்கள், திராட்சைகள், செர்ரிகள் மற்றும் மாம்பழங்கள் போன்ற சில பழங்களில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. அவற்றை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இவற்றில் ஏற்கனவே உள்ள இயற்கை சர்க்கரையே இதற்குக் காரணமாகும். இந்த பழங்கள் அனைத்தும் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழங்களின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கின்றன.


சிவப்பு இறைச்சி மற்றும் நீரிழிவு நோய்


நீரிழிவு நோயாளிகளுக்கு சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி தீங்கு விளைவிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். இவற்றை உட்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். அதே நேரத்தில், அதிகப்படியான புரதத்தை உட்கொள்வதும் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ