Medicinal Properties of Poonaikali Vidhai: பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும் ஒரு தாவரம். இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். பருப்புத் தாவரமான இது, புரதத்தின் நல்ல மூலமாகும். பூனைக்காலியின் பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது. பூனைக்காலி விதைகள் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை அதிகரிக்கிறது. பார்கின்சன் நோய் போன்ற நரம்பு கோளாறுகளை நிர்வகிப்பதற்கும், கீல்வாதத்தின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. பல நன்மைகளில், பூனைக்காலி விதைகளின் சிறப்பு மருத்துவ குணங்களில் அதன் ஆண்மை பிரச்சனைகளை நீக்கும் குணமும், நரம்பு தளர்ச்சியை போக்கும் குணமும் அடங்கும். பூனைக்காலி விதைகள் வெல்வெட் பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை முக்கியமாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 விந்தணுவின் தரம் எண்ணிக்கையை அதிகரிக்கும் பூனைக்காலி


ஆண்களின் தந்தை ஆகும் கனவு நிறைவேற, ஒரு மில்லி லிட்டர் விந்துவில் விந்தணுவின் (Men's Health) எண்ணிக்கை 20-110 லட்சமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவற்றின் இயக்கம் 40 சதவீதம் வரை இருக்க வேண்டும். விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு கருவுறும் வாய்ப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஏதேனும் காரணத்தால் விந்தணுக்களின் வளர்ச்சி விகிதம், தரம் குறைந்திருந்தால், நீங்கள் பூனைக்காலி விதைகளை உட்கொள்ளலாம்.


ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் பூனைக்காலி


விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க, பூனைக்காலி விதைகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். விதைகள் விந்தணு இயக்கத்தை மேம்படுத்துவதோடு, மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்க உதவும் பெண்களில் புரோலேக்டின் ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தியைத் தடுக்கிறது. பூனைக்காலி விதைகளில் எல்-டோபா இருப்பது புரோலேக்டின் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.மேலும், பூனைக்காலி விதைகளை உட்கொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அவற்றின் பயன்பாடு பாக்டீரியா தொற்றுகளையும் தடுக்கிறது. இதுமட்டுமின்றி, இந்த விதைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது நம் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. 


மேலும் படிக்க | இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை வேகமாக குறையுமா? பதில் இதுதான்!


ஆயுர்வேதமும் பூனைக்காலியும்


பூனைக்காலி விதைகளின் மருத்துவ குணங்கள் ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் அவை பல மருந்துகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத நிபுணர் இது குறித்து கூறுகையில், பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நெல்லி, சிறு நெருஞ்சில் விதை ஆகிய அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து  வைத்துக் கொண்டு, இந்த பொடியுடன் சீந்தில் பொடி, நாட்டுச் சர்க்கரை கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும் என்றார். மேலும் விந்து நீர்த்து போவது குறையும். தாது விருத்தியை அதிகரிக்கும். இவை நரம்புகளை வலுவாக்கி ஆண்மை பாதிப்பை சரிசெய்யகூடியது என்கிறார். எனினும், இதனை பின்பற்றும் மும் ஆயுர் வேத மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏற்ற அளவை அறிந்து கொண்டு சாப்பிடுதல் நல்லது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்ச் பழத்தை சாப்பிட வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ