How To Get Rid Of Lice With Basil: பெண்கள் முடியைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். வானிலை மாறும்போது கூந்தலை பாரமரிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நீளமான மற்றும் கருமையான கூந்தலைப் பெற தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். கூந்தல் வறண்டு, உயிரற்றதாக மாறும் போது, ​​அவை உடையத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், கூந்தலுக்கு ஏற்ப சரியான வைத்தியத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். மறுபுறம் சிலருக்கு இந்த பருவத்தில் பேன் பிரச்சனை ஏற்படக்கூடும். உச்சந்தலையில் பேன்கள் ஏற்படத் தொடங்கினால், முடி உயிரற்றதாக தோற்றமளிக்க தொடங்கும். அந்த வகையில் சில வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் பேன் பிரச்சனையை சமாளிக்கலாம். இருப்பினும் அதில் நாம் சரியான தீர்வு சில சயங்களில் பெறுவதில்லை. ஏனெனில் நாம் பயன்படுத்தும் வீட்டு வைத்தியத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், அப்போது தான் பலன் கிடைக்கும். இந்நிலையில் தலையில் பேன் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன வீட்டு வைத்தியம் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக துளசி முடி கொட்டுதல் (Hair Care Tips), பேன் தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்குவதுடன் கூந்தலை கருப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. குறிப்பாக நரை முடிக்கு, துளசி விழுது அல்லது அதன் எண்ணெயை தலைமுடியில் தடவ வேண்டும். நீங்கள் துளசியை நெல்லிக்காய் மற்றும் மருதாணியுடன் கலந்தும் பயன்படுத்தலாம். இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் முடி பிரச்சனைகளில் ஒன்றான பேன் பிரச்சனையில் இருந்து விடுப்பட துளசியை (Basic For Lice Problems) பயன்படுத்தலாம். 


மேலும் படிக்க | இந்த மாதிரியான உணவு சாப்பிட்டால், ஹாஸ்பிட்டலுக்கு நீங்களே சீக்கிரம் போயிடுவீங்க - பின்விளைவுகள் பெருசு


பேன் பிரச்சனைக்கு துளசியை இப்படி பயன்படுத்துங்கள்:
* துளசியைப் பயன்படுத்துவதன் மூலம் பேன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இதற்கு துளசி நீரால் கூந்தலை அலசவும். இவ்வாறு செய்வதன் மூலம் பேன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.


* அதேபோல் பேன்களை அகற்ற, தேங்காய் எண்ணெயில் பாதாம் எண்ணெயைக் கலந்து, அதில் துளசி தண்ணீரைக் கலந்து, இந்த கலவையை உங்கள் கூந்தலில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் பேன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.


* தேங்காய் எண்ணெயை சூடாக்கி துளசி இலைகளை கொதிக்க வைத்து, அந்த எண்ணெயை கூந்தலில் மசாஜ் செய்து வந்தால் பேன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


* துளசி இலைகளின் பேஸ்ட்டை உங்கள் தலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி பின்னர் கூந்தலை அலசவும். இவ்வாறு செய்வதன் மூலம் பேன் தொலையில் இருந்து விடுப்படலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight Loss Without Diet : டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ