நமது உடலின் முக்கியத்திற்கு முக்கியமாக இருப்பது இதயம், இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும்.  இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் பல ஆபத்து காரணிகள் உள்ளது.  இதயம் ஆரோக்கியமாக இயங்க வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) புகைபிடித்தல் பல்வேறு நோய்களுக்கு திறவுகோலாக இருக்கிறது, சிகரெட் புகையில் உள்ள 7,000 க்கும் மேற்பட்ட இரசாயனங்களின் நச்சு கலவைகள் உள்ளது, அதை உள்ளிழுக்கும் போது முக்கிய அந்த நச்சுக்கள் நமது உடலின் பல முக்கியமான உறுப்புக்களை பாதித்து, இது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.  அதிலும் குறிப்பாக நச்சுப்புகை உங்கள் இதைய ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்துவிடும்.


2) இதய ஆரோக்கியத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.  காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், தாவர அடிப்படையிலான புரதங்கள், விலங்கு புரதங்கள் மற்றும் மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துவது இதயத்திற்கு நல்லது.


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


3) இதய நோய்கள் வராமல் இருக்க தினசரி உடல் செயல்பாடு மிக அவசியம்.  கார்டியோவாஸ்குலர் மெடிசினில் ஃபிரான்டியர்ஸில் நடத்தப்பட்ட ஆய்வில்  அடிக்கடி உடற்பயிற்சி செய்வதற்கும், இருதய இறப்பு அபாயத்தைக் குறைப்பதற்கும், இருதய நோய்களை வளர்ப்பதற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 150 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிரமான செயல்பாடுகளை செய்ய வேண்டும்.


4) நல்ல தூக்கம் என்பது பல்வேறு நோய் தாக்குதலிலிருந்து உடலை பாதுகாக்கிறது, போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு, நீரிழிவு நோய் மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.  உங்கள் இதய ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க போதுமான தூக்கம் அவசியம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது.


5) மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக இருந்தாலும், இதனால் இதய ஆரோக்கியம் சீர்குலையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  நாள்பட்ட மன அழுத்தம் அல்லது நீண்ட கால மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உயர்த்தும்.  எனவே மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யவேண்டும்.


6) உயர் இரத்த அழுத்தம் இதய நோய் அபாயத்தை உயர்த்தும் மற்றொரு காரணியாகும், இது உங்கள் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகங்கள், மூளை, இதயம் மற்றும் பிற முக்கிய உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.  அதனால் உங்கள் இரத்த அழுத்த அளவுகள் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும்.


7) அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்த சர்க்கரை அளவுகள் இருப்பதும் உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும்.  அதனால் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்தும் வேலையில் ஈடுபடுவது நல்லது.  


8) அதிக எடை அல்லது பருமனாக இருப்பது இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.  இது முக்கியமாக உங்கள் ட்ரைகிளிசரைடுகள், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.


மேலும் படிக்க | பேலியோ டயட்டால் அதிகரித்த நீரிழிவு! நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ