Weight Control Diet: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் உடல் எடையை அதிகரிப்பது இன்றைய மக்களுக்கு பெரும் பிரச்சனையாகி வருகிறது. இந்த உடல் பருமன் பல நோய்களையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதில் மாரடைப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உடல் பருமனை குறைக்க, இப்போதெல்லாம் பலரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு குறிப்பிட்ட  டயட் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இது சரியான வழியா அல்லது பிரச்சனையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்குமா என்பது குறித்து இதில் விரிவாகப் பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்


முதலில், பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகளை அறிந்துகொள்வோம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றைச் சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது. அவற்றை உட்கொள்வதன் மூலம், நீங்கள் முன்பை விட அதிக சுறுசுறுப்பாகவும், மெலிதாகவும் இருப்பீர்கள். இவற்றை உண்பதால் உடலில் நீர்ச்சத்தும் குறையாது. அவை எளிதில் ஜீரணமாகி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. 


மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்


கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் நன்மைகள்


பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும் உணர்வை தரும். இதன் காரணமாக, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இதுபோன்ற பல நன்மை தரும் ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் உள்ளன. இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் நபர்கள் நீண்ட காலத்திற்கு இளமையாக காட்சியளிக்கிறார். இதை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. வயிற்றுக் கோளாறுகளுடன் போராடுபவர்களுக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது. இவற்றை சாப்பிடுவதால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாது, கண்பார்வை நன்றாக இருக்கும்.


உடலில் புரதம் மற்றும் கொழுப்பு குறைபாடு


இப்போது பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்துகொள்வோம். நீங்கள் தானியங்களுக்குப் பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டால், உங்கள் வயிறு ஒருபோதும் முழுமையாக நிரம்பாது. இதன் காரணமாக, உடலில் புரதம் மற்றும் கொழுப்பு குறைபாடு ஏற்படும்.


இதன் காரணமாக உடலின் தசைகள் தங்கள் வலிமையை இழக்கின்றன. நீங்கள் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கலாம். நார்ச்சத்து மூல உணவுகளில் அதிக அளவில் காணப்படுகிறது, இதன் காரணமாக வாயு-அமிலத்தன்மை அல்லது வீக்கம் ஏற்படலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதால் உடலில் பல கோளாறுகள் ஏற்படும்.


எனவே, பழங்களையும், காய்கறிகளையும் தினமும் சாப்பிட்டாலும், உங்களுக்கு உடலுக்கு தேவையான புரதம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்வது இன்றியமையாததாகும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ