Health Benefits of green coriander: நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் கொத்தமல்லி, அரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்காலத்தில் கொத்தமல்லி இலைகளுக்கு பஞ்சமே இல்லை. அதனால், அதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டு பல ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். அதன் மருத்துவ குணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்படுகிறீர்களா அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா, எதுவாக இருந்தாலும் கொத்தமல்லி இலைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்  கொத்தமல்லி குறித்து கூறுகையில், கொத்தமல்லி இலையில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலேட், பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன. கொத்தமல்லி இலைகளில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது, எனவே அவை எடை இழப்பிற்கும் பெரிதும் உதவுகின்றன.


ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!


கொத்தமல்லி இலைகளில்  உள்ள சத்துக்கள்:


கொத்தமல்லி இலைகள் பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.


கொத்தமல்லி இலைகள் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


1. கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்


கொத்தமல்லி இலைகளை உட்கொள்வது உடலில் உள்ள உயர் கொலஸ்ட்ரால் அதாவது HDL அல்லது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனுடன் கெட்ட கொலஸ்ட்ரால் அதாவது LDL அளவும் குறைகிறது. இதன் காரணமாக, குளிர்காலத்தில் கொத்தமல்லி இலைகளை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.


2. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்


சிறுநீரகத்தில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குவதில் கொத்தமல்லி மிகவும் சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் இலைகளை ஜூஸ் வடிவிலோ அல்லது சட்னி வடிவிலோ உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் இது இன்சுலின் சுரக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.


ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!


3. செரிமானத்தை மேம்படுத்தும்


கொத்தமல்லி கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது, இதனால் வாயு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. கொத்தமல்லி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி வலுப்படும்.


4.  ரத்த சோகையை நீக்கும்


இரத்த சோகையால் அவதிப்படுபவர்களுக்கு கொத்தமல்லி இலை சிறந்த மருந்தாக அமையும். கொத்தமல்லி இலைகளில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.  இரத்த சோகை ஏற்படுவதற்கு இரும்புச்சத்து குறைவது தான் முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.


5. சருமத்திற்கும் நன்மை பயக்கும்


கொத்தமல்லி இலைகளை உட்கொள்வதால், சருமம் உள்ளிருந்து சுத்தம் ஆவதால், சருமம் பளிச்சென்று இருக்கும். சருமம் மென்மையாக இருக்கும். முகப்பரு, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR