குழந்தைப் பருவத்தில், உங்கள் தாத்தா, பாட்டி, பெற்றோர்  சியவன்பிராஷ் சாப்பிடுவதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். சில சமயங்களில் அவர்கள் அதை சாப்பிடும்படி உங்களை கட்டாயப்படுத்தியிருக்கலாம். சுவையில் அவ்வளவு சிறந்ததாக இல்லை என்றாலும், சியாவன் பிராஷ் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியை போன்றது எனலாம். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில், தொற்றிலிருந்து உங்களை காக்கும் கவச உனவு எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொரோனா காலத்தில், நோய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சியாவன்பிராஷ் லேகியத்தை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆனால், அதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும்,  தவறான முறையில் எடுத்துக் கொள்வதும் ஆபத்து.


சியவன்ப்ராஷ் ஒரு பழங்கால ஆயுர்வேத தீர்வு, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. சியவன்ப்ராஷ் என்பது புளிப்பு-இனிப்பின் கலந்த சுவை உள்ள ஒரு லேகியம். இதை நீங்கள் பகலில் உட்கொள்ளலாம். ஆயுர்வேத அறிவியலால் அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியமான பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த சக்திவாய்ந்த லேகியம் நோயெதிர்ப்பையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.


ALSO READ | பகீர் தகவல்! அளவிற்கு மிஞ்சிய Vitamin D மத்திரைகளால் மன நோய் ஏற்படலாம்!


இன்று நீங்கள் சந்தையில் பல வகையான சியவன்பிராஷைக் காணலாம்.  சியவன் பலன் கிடைக்கவும், அது பாதைப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும், சாப்பிடுவதற்கான சரியான வழியை அறிந்து கொள்வது முக்கியம். இது தவிர, உங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சரியான சியவன்பிராஷை எவ்வாறு தேர்வு செய்யலாம் அறிந்து கொள்வது முக்கியம்.


சியாவன்ப்ராஷ் என்பது பலவிதமான மூலிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் லேகியம். இதில் உள்ள பொருட்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த அம்லா  என்னும் நெல்லிக்காய் முக்கியமாக சியாவன்பிராஷில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பல மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த பொருட்கள் ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆன்டிமுடேஜெனிக் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.


ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!


பெரும்பாலான இந்திய குடும்பங்கள் குளிர்காலத்தில் இந்த  லேகியத்தை உட்கொள்வதை பார்க்கலாம். ஏனெனில் இந்த சீசனில் வெப்பநிலை குறைவதால் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதன் முழுமையான பலன்களை பெற விரும்பினால், நீங்கள் அதை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சியாவன்பிராஷ் சாப்பிடுவது சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இது சளி உருவாவதைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சுவாச பாதைகளை சுத்தம் செய்கிறது.


ஆரோக்கியமான பொருட்களால் செய்யப்பட்ட, சியவன்ப்ராஷ் இனப்பெருக்க அமைப்பைத் தூண்டுவதிலும், பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை அதிகரிக்க இது சிறந்த வீட்டு வைத்தியம் எனலாம்.


சியவன்பிராஷ் சாப்பிடுவதற்கான சரியான வழி


சியாவன்பிராஷ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து தான். அதனால் நீங்கள் அதை அதிக அளவில் சாப்பிடக்கூடாது. அதனால்,  அஜீரணம், வாய்வு, வயிற்று உப்புசம், வயிற்று போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். பெரியவர்கள் தினமும் 1 டீஸ்பூன் சியவன்பிராஷை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் காலை மற்றும் மாலையில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் சியாவன்பிராஷ் கொடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


ALSO READ  | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


ஆஸ்துமா அல்லது சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சியாவன்பிராஷை பால் அல்லது தயிருடன் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 50 வகையான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கலந்து சியவன்பிராஷ் தயாரிக்கப்படுகிறது . ஆனால் சியவன்பிராஷில் உள்ள பொருட்களின் அளவு பிராண்டிற்கு பிராண்டிற்கு மாறுபடும். வாங்குவதற்கு முன், பாட்டிலில் உள்ள விபரங்களை படிக்க மறக்காதீர்கள்.


சியவன்பிராஷுக்கு புளிப்பு-இனிப்பு சுவையை அளிக்க, சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், இதனை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால், ஒரு நபர் தினமும் 3 கிராம் சியாவன்பிராஷ் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளி தனது உணவில் சியாவன்பிராஷை சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்தது.


ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR