இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 11 இளைஞரில் ஒருவருக்கு இந்த நோயின் பிடியில் சிக்கி உள்ளனர். அதன்படி தற்போது கோடிக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில், சுமார் 13.6 கோடி பேர் ப்ரீ டயாபிடிக் நோய்க்கு இரையாகியுள்ளனர். அதாவது விரைவில் இவர்களும் முழுமையாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம். இந்த நோய் இருவருக்கு ஒருமுறை வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் இதிலிருந்து மீண்டு வர முடியாது. இருப்பினும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆயுர்வேத வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வேப்ப இலைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் பானங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல உணவுகள் சர்க்கரையை வேகமாக அதிகரிக்கின்றன. அந்தவகையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒருவர் மிகவும் சரியான உணவு மற்றும் மருந்துகளை நாட வேண்டும்.


இரத்த சர்க்கரையை கட்டுபடுத்த வேப்ப இலைகள் உதவியாக இருக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கும் வேப்ப இலை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, வேப்ப இலைகளில் உள்ள சில விஷயங்கள் உடலின் உள்ளே சென்று இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். வேப்ப இலைகளில் பல ஃபிளாவனாய்டுகள் உட்பட பல கூறுகள் உள்ளன. அவை கணையத்தைத் தூண்டுகின்றன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் இந்த வேப்ப இலைகளை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே பலன் தரும். எனவே நீங்கள் வேப்பம்பூ பொடியையும் பயன்படுத்தலாம். இதற்கு, உலர்ந்த வேப்ப இலைகளை மிக்ஸியில் மிருதுவாக அரைக்கவும். அதன் பிறகு இந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.


மேலும் படிக்க | உடலில் இந்த குறைபாடெல்லாம் தெரிகிறதா... அது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!


வேப்ப இலைகளை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்
அதிகாலையில் வெறும் வயிற்றில் 4-5 வேப்ப இலைகளை மென்று சாப்பிடுங்கள். இதற்குப் பிறகு தண்ணீர் குடிக்கவும். இதன் மூலம் வேப்ப இலைகள் உடலைச் சென்றடைந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். வேப்ப இலை சாப்பிட முடியாதவர்கள் வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம். வேப்பெண்ணெய் உட்கொள்வதும் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும். அதன் பயன்பாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வேப்ப இலைகள் சாப்பிட கசப்பாக இருந்தாலும், அவற்றில் பல மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.


வேப்ப இலைகள் சருமத்திற்கு பொலிவை தரும்
வேப்ப இலையில் உள்ள அனைத்து கூறுகளும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும். இதன் பயன்பாடு தோல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும் வயதானவர்கள் வேப்ப இலைகளை குறைவாக சாப்பிட வேண்டும்.


பாகற்காய் ஜூஸ்
தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் அல்லது பாகற்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை தவிர்க்கலாம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வைக்கிறது.


மேலும் படிக்க | காலையில் முடி மற்றும் தோலுக்கு மோரை தடவினால் இவ்வளவு நன்மைகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ