நீரிழிவு உணவு: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் பெரிய பிரச்சனை என நீரிழிவு நோயாளிகள் நினைக்கின்றனர். உண்மையில், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது என்பது அப்படி ஒன்றும் பிரம்மபிரயர்த்தனம் செய்ய வேண்டிய காரியமில்லை. மருத்துவர்களின் பரிந்துரைகளை கடைபிடிப்பதும், ஏற்ற உணவை சரியான நேரத்தில் உண்பதும், சுறுசுறுப்பாக இருப்பதுமே ரத்த சர்க்கரையை பராமரிக்க உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கிய பராமரிப்பு குறிப்புகள் என பலர் பல விதமான டிப்ஸ்களைக் கொடுத்தாலும், மிகவும் சுலபமான ஒன்று. நாம் சாப்பிடும் உணவு எதில் செய்யப்பட்டது என்பதில், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தந்திரம் அடங்கியிருக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இவ்வளவு ஈஸியா? என்ற ஆச்சரியத்தைக் கொடுக்கும் சாதாரண உணவுகள் இவை. விலையும் குறைவு, பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், பயமின்றி பின்பற்றும் குறிப்புகள் இவை.


இந்த மாவுகளில், தோசை, ரொட்டி, களி என விதவிதமாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால், உயர் இரத்த சர்க்கரை என்ற கவலை உங்களுக்கு மறந்துபோகும். நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய மாவு வகைகள் இவை. 



இந்த தானியங்களை மாவாக மாற்றியும் தோசையாகவோ, சப்பாத்தியாகவோ சாப்பிடலாம். அல்லது விருப்பமான வேறு வழியிலும் உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.


நீரிழிவு நோய்க்கான ஆரோக்கியமான மாவு வகைகள்


ஓட்ஸ் மாவு
ஓட்ஸில் நல்ல அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே ஓட்ஸை அரைத்து ரொட்டி செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரை நோயின் அளவு கட்டுப்படும். இந்த மாவில் ரொட்டி அல்லது தோசையை செய்து பாருங்கள். விரும்பினால் கீரை, பாசிப்பருப்பு போன்ற பச்சைக் காய்கறிகளுடன் ஓட்ஸ் மாவு கலந்தும் ரொட்டி செய்யலாம். அவை ஆரோக்கியமாக மட்டுமல்ல, நாவுக்கு சுவை சேர்க்கும் அருமையான விருந்தாகவும் மாறும்.  


மேலும் படிக்க | HBP & Salt: சுவையை பல மடங்கு அதிகரிக்கும் உப்பின் கருப்பு பக்கம்! உப்பை அதிகமாய் இட்டால்?


ராகி மாவு
புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள ராகி,  நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த மாவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லிப்பிடுகள் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. அதனால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் மாவை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஜவ்வரிசி மாவு
ஜவ்வரிசியில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதை உட்கொள்வதன் மூலம் உங்கள் செரிமானம் சிறப்பாக இருக்கும். உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். ராகி மாவில், ரொட்டி, தோசை, இட்லி, உப்மா போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.


மேலும் படிக்க | தினமும் வெறும் வயிற்றில் 3 பச்சை இலை! யூரிக் அமிலம் - கீல் வாதத்தில் இருந்து விடுதலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ