இப்போது சர்க்கை நோய் என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு நோயாக மாறிவிட்டது. மருத்துவ மொழியில் சொல்வதென்றால் இது ஒரு நோயல்லா. சர்க்கரை குறைபாடு அல்லது அதீத சர்க்கரை எடுத்துக் கொள்வதால் வரும் ஒரு குறைபாடு ஆகும். அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, குறைவாக இருந்தாலும் பிரச்சனை. இதனை சரிவிகிதளவில் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு எதற்காக சர்க்கரை நோய் வருகிறது என்பதையெல்லாம் துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது. வாழ்க்கை முறை, மரபணு, குடும்ப பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிகோடிட்டு காட்டப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் கட்டுப்பாடு அவசியம். இந்த பிரச்சனை வந்தவுடனே மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று அதன்படி நடப்பது அவசியம். இது ஒரீரு நாட்களில் அல்லது குறிப்பிட்ட வருடங்களில் எல்லாம்  குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் உடனே பயணிக்கும் ஒரு குறைப்பாட்டு பிரச்சனை என்பதால், சாப்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றில் அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம். 


மேலும் படிக்க | ஒல்லியாக டிரை பண்றீங்களா? கண்டிப்பா இதை மட்டும் செய்யாதீங்க! குண்டாயிடுவீங்க


அந்தவகையில் சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு உகந்ததாக நாவல் பழ விதைகள் பார்க்கப்படுகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறதாம். பெரும்பாலானோருக்கு இதன் மகத்துவம் தெரிந்திருக்கவில்லை. இந்த விதைகள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன. ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், நாவல் பழத்தின் பொடியை உட்கொள்வதால், கல்லை கரைத்து உடலில் இருந்து நீக்குகிறது.


சர்க்கரை நோயாளிகள் நாவல் பழ விதைப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் கட்டுப்படும் என்பது மட்டுமின்றி, அதன் மூலத்தின் ஆதிக்கத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒருவருக்கு இரத்த சோகை புகார் இருந்தால், அவர் நாவல் பழத்தையும் அதன் விதைகளையும் சாப்பிடலாம்.


நாவல்பழ விதை பொடி செய்வது எப்படி


நாவல் பழம் சாப்பிட்ட பிறகு, அதன் விதையை பொடி செய்து ஆண்டு முழுவதும் சேமித்து வைக்கலாம். அதன் வழக்கமான உட்கொள்ளல் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் பல நோய்களுக்கான சிகிச்சையிலும் பயனுள்ளதாக இருக்கும். முதலில், நீங்கள் சாப்பிட்ட நாவல் பழ விதைகளை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவுங்கள். இதனால் அவற்றில் உள்ள அழுக்குகள் சுத்தமாகிவிடும். அதன் பிறகு, லேசான சூரிய ஒளியில் உலர்த்தவும். வலுவான சூரிய ஒளியில் அவற்றை உலர வைக்க வேண்டாம். 


அப்படி செய்யும்பட்சத்தில் அதில் உள்ள அனைத்து பண்புகளும் அழிக்கப்படும். விதை காய்ந்ததும், அவற்றை நன்கு அரைத்து, அதன் தூளை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் (பாத்திரம்) காற்று புகாத மூடியால் நிரப்பி உலர்ந்த இடத்தில் வைக்கவும். நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம், சுத்தமான கரண்டியால் வெளியே எடுத்து காற்று புகாத வகையில் கொள்கலனை மூடி வைக்கவும்.


மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ