இரத்தத்தில் உள்ள கழிவுகளே மனிதர்களுக்கு நோய் ஏற்பட முக்கிய காரணமாகிறது. உடலின் கழிவுகள் சரியாக வெளியேறாவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து, பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இரத்தம் அழுக்காக இருந்தால், அது சருமம் முதல் உள்ளுறுப்புகள் வரை அனைத்தையும் பாதிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் கெட்ட கொழுப்பு, யூரிக் அமிலம் போன்றவை அதிகமாக படிந்தால் உடலுக்கு பல சேதங்கள் ஏற்படும். அதிலும் உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால், உடல் நோய்களின் உறைவிடமாக மாறத் தொடங்கிவிடும். 


நமது உடலிலுள்ள இரத்தமானது, நுரையீரல் மற்றும் அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறது. சில உணவுகளும், சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களும் இரத்தம் மாசடைய காரணமாகின்றன.


பச்சையம்


இரத்தத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற நமது உணவில் சில உணவுகளை சேர்த்துக் கொள்வது சுலபமான வழிமுறை ஆகும். உணவே மருந்து என்று சொல்லும்போது, அதில் பச்சையம் (Chlorophyll) அதிக அளவில் உள்ள உணவுகளை உண்பது கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவியாக இருக்கும்.


பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிறத்தில் இருக்கும் காய்கனிகளிலும், அடர் பச்சை முதல் லேசான பச்சை என பல்வேறு நிற மாறுபாடுகளில் இருக்கும் காய்களை சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | இரத்தத்தை சுத்தமாக்க எனக்கு இந்த உணவெல்லாம் வேண்டும்! அடம் பிடிக்கும் சிறுநீரகம்!


பெர்ரி பழங்கள்


ப்ளூ பெர்ரி, ஸ்ட்ரா பெரி, ராஸ் பெர்ரி என பெர்ரி வகைப் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராடவும், இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெர்ரி பழங்கள் சிறந்தவை என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


பூண்டு


நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் குணம் கொண்ட பூண்டு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியைப் அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால், பூண்டு உண்பது, இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த ஓட்டம் சீராகவும் உதவுகிறது.


குர்குமின்


குர்குமின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள மஞ்சளில் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி என்ற விஷயம் இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது. 


ஆண்டி ஆக்ஸிடெண்ட்


ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுகள் கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தவும், இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன. இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சை முதலிடம் பெறுகிறது. உணவில் எலுமிச்சையை அதிகம் பயன்படுத்த வேண்டியதற்கான முக்கியக் காரணம் இதுதான். அஇதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆண்டி ஆக்சிடெண்ட்கள் உதவுகின்றன.


இஞ்சி


உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் இஞ்சி எப்போதும் அனைவருக்கும் நல்ல  பலன்களைத் தரும் அருமருந்து என்றே சொல்லலாம். இது உடல் எடையைக்குறைப்பு முதல், முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி என உடல்நலனை பாதுகாப்பதில் உதவி செய்கிறது.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கிட்னி பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ