இன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அதன்படி 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறு வயதிலேயே வெள்ளை முடி
முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம். பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


நரை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சை
இளமையில் ஏற்படும் வெள்ளை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சையை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் ஆளி விதையை முயற்சி செய்யலாம், ஏனெனில் இது உங்களுக்கு லாபகரமான ரிசல்ட்டை தரும். எனவே முடி பராமரிப்புக்கு ஆளி விதையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை  தெரிந்து கொள்வோம்.


ஆளி விதையின் நன்மைகள்
ஆளி விதையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவற்றை சாலட் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். 



ஆளிவிதை ஹேர் மாஸ்க்கை உபயோகிக்கவும்
ஆளிவிதையின் ஹேர் மாஸ்க்கை தயார் செய்து தலைமுடியில் தடவி அதை ஊற வைக்கவும், பின்னர் அதை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாற ஆரம்பிக்கும்.


ஹேர் மாஸ்க் செய்வது எப்படி
4 கப் தண்ணீரில் ஒரு கப் ஆளிவிதையை எடுத்துக்கொள்ளவும், இப்போது அவற்றை நன்கு கொதிக்கவைத்து, பருத்தி துணியில் போர்த்தி விதைகளை பிழியவும். இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தவும்.


(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR