சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மரணத்தின் வாயிலுக்கு கொண்டு செல்லும் நோய்களில் புற்று நோயும் ஒன்று. உடலுக்கு அடிப்படையாக உள்ள செல்கள் என்னும்  உயிரணுக்களை பாதிக்கும் நோயைத் தான் புற்றுநோய் என்கிறோம்.  இந்த நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி, அதற்கான பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த பெயரை கேட்டாலே மக்களின் மனதில் தோன்றும்  பயமும் பாதிப்பும் அதிகம் தான் என்றால் மிகையில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்று நோய் என்னும் கொடிய அரக்கனை தவிர்க்க மஞ்சளை உணவில் சேர்ப்பது நல்லது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மஞ்சளின் திறனை உலகெங்கிலும் உள்ள பல விஞ்ஞானிகளால் சில ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரிக்கத்துள்ளனர். உலகில் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்..!!


மஞ்சளில் இயற்கையாகவே காணப்படும் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. பெரும்பாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் மீண்டும் வருகிவதைக் காணலாம். ஏனெனில் உடலில் மீதமுள்ள சில புற்றுநோய் செல்கள் மீண்டும் நோயை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குர்குமின் உள்ள மஞ்சளை ஸ்கின் பேக்காக பாதிக்கப்பட்ட உடலின் பாகங்களில் தடவலாம்.



சருமத்தில் தடவுவதன் மூலம் குர்குமின் உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் புற்றுநோய் செல்களை அகற்றும், ஆனால் இது ஆரோக்கியமான செல்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.


தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வதும் புற்று நோய் வராமல் தடுப்பதில் நல்ல பலன் தரும். உலகம் முழுவதும் மட்டுமல்ல, இந்தியாவிலும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, தொடர்ந்து மஞ்சளை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.



மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!


சருமத்தை அழகுபடுத்துவதில் இருந்து, சளி, நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படும் இந்த மசாலா, நமது உணவின் சுவை மற்றும் நிறம் இரண்டையும் அதிகரிக்கிறது. மொத்தத்தில் மஞ்சள் என்பது நம் சமையலறையில் இருக்கும் மருத்துவக் கடை எனலாம். அதனால் தான் பயன் தரும் மஞ்சள் இந்திய குடும்பங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


இந்திய பாரம்பரியத்தில், மஞ்சள் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. உணவில் இதை சேர்ப்பதால், ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களைத் தரும். நமது புராண நூல்களில், மஞ்சள் உயிர் காக்கும் பொருள் என்று கருதப்படுகிறது, நீங்கள் மஞ்சளை அதிகம் பயன்படுத்தும் போது, அதன் 'ஆயுர்வேத சக்திகளால்' ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR