தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்..!!

மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர் சத்து உள்ளதோடு, புற்று நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது.

Last Updated : Feb 11, 2022, 04:50 PM IST
  • வெள்ளரிக்காய் நம்மை நீரழிவில் இருந்து காப்பாற்றுகிறது.
  • தினசரி உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • வெள்ளரிக்காய் வாய் நாற்றத்தை நீக்குகிறது
தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்..!! title=

கோடை காலம் வர உள்ள நிலையில், உடலுக்கு அதிக தண்ணீர் சத்து தேவைப்படும். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீர் குடிக்கலாம் என்றாலும், சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய தண்ணீர் உள்ளது அவற்றை சாப்பிடுவது நீர் சத்துடன், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும். வெள்ளரியும் இவற்றில் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. 

வெள்ளரி சாப்பிடுவதால் 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும். வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் உள்ளது என்பதோடு அது நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வெள்ளரிக்காய் ஆரோக்கிய நன்மைகள், மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது, அழகை கூட்டுவதிலும் பயன்படுகிறது.

1. நீரிழப்பைத் தடுக்கும்

வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது வேண்டுமானால் வெட்டி உப்பு தூவி சாப்பிடலாம். வெள்ளரிக்காயை சாண்ட்விச்சில் சேர்த்தும் சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால், முழுமையாக சாப்பிடுவதால்,  ஊட்டச்சத்து பண்புகளின் பலனையும் பெறுவீர்கள். வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர் இருப்பதால், நீர் இழப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

2. புற்றுநோயைத் தடுக்கிறது

வெள்ளரிக்காயில் உள்ள புரோட்டீன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை நம் உடலுக்குத் தருவதுடன், புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இது புற்றுநோய் செல்களில் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது, எனவே இதனால், புற்றுநோய் எதிர்ப்பு பழம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

3. செரிமான அமைப்பைச் சீராக வைக்கிறது

வெள்ளரிக்காயில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து நமது உடலின் செரிமான செயல்முறையை சீர் செய்கிறது. வாயு, மலச்சிக்கல் அல்லது வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஒரு கிளாஸ் வெள்ளரி சாறு உங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.

4. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது

வெள்ளரிக்காயை சிறிது நேரம் வாயில் வைத்து மென்று சாப்பிட்டால் சுவாசம் புத்துணர்ச்சி அடைவதுடன் வாய் துர்நாற்றம் விலகும். வெள்ளரியை மெல்லுவதன் மூலம், வாயிலிருந்து வரும் துர்நாற்றம் முற்றிலும் விலகும். ஏனெனில் இது துர்நாற்றத்தை பரப்பும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.

5. முகத்தில் தடவினால் முகம் பொலிவடையும்

வெள்ளரிக்காய் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. முகத்தின் கருமையை, வெள்ளரிக்காய் பேக் போடுவதன் மூலம் அதை நீக்கலாம். இது சருமத்தை பொலிவாக்கி, முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும். இது நமது சருமத்திற்கு டோனிங்காக செயல்படுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News