இதயம் ஆரோக்கியமாக இருக்க, நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகாமல் இருப்பது அவசியமாகும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகமாகின்றன. மாரடைப்பு தீவிர நோயாக மாறியதற்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமானதே முக்கிய காரணமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் மாரடைப்பு மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. மனித இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அடைப்பதால், இதயம் சரியாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.


இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும்


நம் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவை. சில பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். எந்தெந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் மூலம், அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். 


இந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்


- இதய நோயாளிகள் ஆப்பிள் சாப்பிட அறிவுறுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆப்பிள் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும். ஆகையால் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 


மேலும் படிக்க | தைராய்டை கட்டுப்படுத்த வீட்டு வைத்திய குறிப்புகள் 


- ஆனைக்கொய்யா எனப்படும் அவகேடோவையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இந்த சூப்பர்ஃபுட் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். நோய்களையும் தடுக்கும். இதில் கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின்கள் ஏ, பி, ஈ, நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் புரதம் அகியவை நிறைந்துள்ளன.


- அவகேடோ பழத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. இதை சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.


இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்


- பருப்பு வகைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும். இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும்போது பெரும்பாலான மக்கள் பருப்பு வகைகளை சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் இதை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது. இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


- இது தவிர, உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் பச்சைக் காய்கறிகளை உண்பது அனைத்து  வகையான நோய்களையும் தடுக்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக நீக்குவது எப்படி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR