மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், நமது உடலில் பல வகையான நச்சுக்கள் சேரத் தொடங்குகின்றன. இது பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது. உடல் பருமன், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அத்தகைய சூழ்நிலையில், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்,  பல விதமான உடல் நல பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையையும் அழுக்கையும் நீக்குவது, அதாவது டீடாக்ஸ் செய்வது மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்வது தொடர்பாக வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவது சிறந்த பலன் கொடுக்கும். சில பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தேங்கியுள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்றுவதில் உடனடி பலன் கிடைக்கும். அதோடு உடல் எடையையும் குறைக்கலாம்.


வீட்டில் எளிதாக தயாரிக்கக் கூடிய சில பானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தால், சிறந்த பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!


புதினா மற்றும் வெள்ளரி பானம்


புதினா மற்றும் வெள்ளரிக்காய் பானம் உங்கள் உடலில் சேரும் நச்சுக்களையும், அழுக்குகளையும் சுத்தம் செய்கிறது. புதினா நன்றாக நறுக்கி வெதுவெதுபான தண்ணீரில் சேர்க்கவும், அதில் துருவிய வெள்ளரிக்காயையும் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி குடிக்க வேண்டும். வெள்ளரிக்காயில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலத்தில், நீண்ட நேரம் உடலின் நீர் சத்து குறையாமல் வைத்திருக்கும். மறுபுறம், புதினா இலைகளில் பல வகையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. பொதுவாகவே, இந்த பானம் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.


இலவங்கப்பட்டை - தேன் கலந்த பானம்


இலவங்கப்பட்டை மற்றும் தேன் பானம் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலவங்க பட்டையை தட்டி  கொதிக்கும் நீரில் போட வேண்டும். நீர் சற்று கொதித்ததும், அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது ஆறியதும், அதில் தேன் கலந்து அருந்த வேண்டும். இந்த பானம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இலவங்கபட்டையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடலின் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகின்றன. அதே நேரத்தில், தேனில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இரண்டின் கலவையும் உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ