கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி   பயன்பாட்டில் உள்ள நிலையில்,  ரஷ்யாவின் கொரோனா வைரஸ் (Corona Virus) தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI)  அனுமதி வழங்கியது. 

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் (Dr Reddy's) நிறுவனம், 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்  தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம்  செய்துள்ளது.


மே 1 ஆம் தேதி, இந்தியாவிற்கு  ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியின் 15 லட்சம் டோஸ் வந்துள்ள நிலையில், மேலும்  15 லட்சம் டோஸ் விரவீல் விரைவில் இந்தியாவிற்கு வந்து சேரும் என கூறப்படுகிறது.


ALSO READ | ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி AK47 போல நம்பகமானது: விளாடிமிர் புடின்


இந்தியாவுக்கு, மே மாதத்தில் 30 லட்சம், ஜூன் மாதத்தில் 50 லட்சம், ஜூலை மாதம் 1 கோடி என்ற அளவில், 1 கோடியே 80 லட்சம் ஸ்பூட்னிக் வி டோஸ் கிடைக்கும் . தடுப்பூசிக்கு நிதியளித்த ரஷ்ய இறையாண்மை நிதியமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF) 5 இந்திய நிறுவனங்களுடன் 85 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


இவை இந்தியாவில் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.


மார்ச் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V  தடுப்பூசியின் 36.1 கோடி டோஸ்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் 36 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி  கிடைக்கும் எனவும் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர். 


ALSO READ | Sputnik-V தடுப்பூசி: மே மாதத்திலிருந்து பயன்பாட்டிற்கு வருகிறதா; உண்மை நிலை என்ன


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR