புதுடெல்லி: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடுமையான கோவிட்-19 தொற்று உள்ளவர்கள், கடுமையான நடவடிக்கைகள் அல்லது கடின உழைப்பைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில், குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு வராமல் இருக்க சில நேரம் கடின உழைப்பு அல்லது கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


மேலும் படிக்க | இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை! யாரெல்லாம் இஞ்சியை அதிகமா சாப்பிடக்கூடாது?


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) ஆய்வை மேற்கோள் காட்டிய மத்திய சுகாதார அமைச்சர், "ஐசிஎம்ஆர் ஒரு விரிவான ஆய்வை நடத்தியது மற்றும் கடுமையான கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சில காலம் கடின வேலைகளைச் செய்யக்கூடாது என்பதைக் கண்டறிந்துள்ளது. ஓரிரு வருடங்கள் கடும் உழைப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.



குஜராத்தில் மாரடைப்பால் உயிரிழக்கும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் இறப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சௌராஷ்டிராவில் மாரடைப்பு வழக்குகள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


மேலும் படிக்க | எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை


அண்மையில், அக்டோபர் 22 அன்று கபத்வஞ்ச் கேடா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்த விவரங்களை டாக்டர் ஆயுஷ் படேல், எம்.டி., ANI உடன் பகிர்ந்துகொண்டார்.


"வீர் ஷா என்ற 17 வயது சிறுவன், கபட்வஞ்சில் உள்ள கர்பா மைதானத்தில் கர்பா விளையாடிக் கொண்டிருந்தபோது, தலைசுற்றல் ஏற்பட்டு, பதிலளிக்கவில்லை. சம்பவ இடத்தில் இருந்த தன்னார்வத் தொண்டர்கள் உடனடியாக அவரைப் பார்த்து, இருதய-சுவாச மறுமலர்ச்சியைச் செய்தார்கள். நாங்கள் அவருடைய உயிர்ச்சக்திகளைக் கண்காணித்தோம், ஆனால் நாடித் துடிப்பு நின்றுவிட்டது.. அவருக்கு மூன்று சுழற்சிகள் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் (CPR) கொடுக்கப்பட்டது. ஆனல் அவரை பிழைக்க வைக்க முடியவில்லை" என்று மருத்துவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஆயுளை நீட்டிக்கும் நார்ச்சத்து! கரையாத நார்ச்சத்தும் கரையும் ஃபைபர் சத்தும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ