பல சமயங்களில் நன்றாக சாப்பிட்ட பின்னும், உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சிறிது நேரம் வேலை செய்தாலே உடல் மிகவும் சோர்வடைந்து விடும். மூட்டுகளில் தாங்க முடியாத வலி இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால், கவலை வேண்டாம். ஊறவைத்த பாதாம் அல்லது ஊற வைத்த கொண்டைக்கடலை இதில் ஒன்றை உங்கள் காலை உணவில் சேர்த்தால், உங்கள் அனைத்து பிரச்சனைக்கும் குட்பை சொல்லலாம். கொண்டைக்கடலையை  கொத்துக்கடலையை என்னும் கூறுவார்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் சோர்வு, பலவீன எலும்புகள், இரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால், உங்கள் டயட்டில் ஊற வைத்த பாதாம் மற்றும் ஊறவைத்த கொண்டைக்கடலை இரண்டில் ஒன்று சேர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக காலையில் சேர்ப்பதால், நாள் முழுவதும் எனர்ஜியுடம் இருக்கலாம்


ஊறவைத்த பாதாம்  மற்றும் கொண்டைக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


ஊற வைத்து பாதாம் அல்லது ஊற வைத்த கொத்துக்கடலைகளில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து ஏராளம். இதில் மிக முக்கியமானது புரதச்சத்து. இதனை தவிர கால்சியம், இரும்பு சத்து, நார்சத்து உட்பட பல அத்தியாவசிய கூட்டத்துக்குள் நிறைந்து காணப்படுகின்றன. இதனை உட்கொள்வதால் பல நோய்களுக்கு பை பை சொல்லலாம்.


முதலில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்


1. பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம். இதனால் செரிமானம் எளிதாவதோடு ஊட்டச்சத்து மதிப்பும் இரட்டிப்பாகிறது. உடலுக்கு ஆற்றலும் வலிமையும் அபரிமிதமாக கிடைக்கும். சோர்வு என்பதே இருக்காது.


2. பாதாம் பருப்பில் நிறைந்துள்ள, ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்துக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் கூட மாரடைப்புக்கு பலியாகி வரும் நிலையில், இதய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.


3. பாதாம் பருப்பில் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஆண்டி ஆக்சிடெண்ட் மட்டுமல்லாது வைட்டமின் ஈ சத்தும் நிறைந்துள்ளது. இதனால் நினைவாற்றல் பெருகி புத்தி கூர்மை வலுவாகிறது.


4. பாதாம் பருப்பில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், எலும்புகள் வலுவாக மிகவும் உதவுகின்றன. இதனால் ஆஸ்டியோபொரோஸிஸ் என்னும் எலும்பு மெலிதல் உள்ளிட்ட எலும்பு ஆரோக்கியம் தொடர்பான நோய்களிலிருந்தும், மூட்டு வலியில் இருந்தும் விடுதலை பெறலாம்.


மேலும் படிக்க | இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!


ஊற வைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


1. ஊறவைத்த கொத்துக்கடலை சாப்பிடுவதால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும். ஏனெனில் இது உடலுக்கு தேவையான எனர்ஜியை அள்ளி வழங்குகிறது.


2. சர்க்கரை நோயாளிகளுக்கு, வீட்டு கொண்டைக்கடலை மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். இதன் லைவ் செமி குறியீடு மிகவும் குறைவு.


3. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம் ஊற வைத்த கொண்டைக்கடலையில் நிறைந்து காணப்படுகிறது. இது இதய துடிப்பை சீராக்குவதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.


4. ஊறவைத்த கொத்துக்கடலை செரிமானத்திற்கு எளிதாக இருக்கும் என்பதால், மலச்சிக்கல் தீர உதவும்.


5. பாதாம் பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதோடு, உடல் எடை குறையவும் உதவும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவறாமல் அருந்துவதால், பலன் கிடைக்கும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ