சர்க்கரை நோயாளிகளுக்கான மிக எளிதான டிப்ஸ்களை நாங்கள் இன்று கொண்டு வந்துள்ளோம், இதன்மூலம் நீங்கள் எளிதாக ஆரோக்கியமாக இருக்க முடியும் மற்றும் இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடியும். இந்த எளிதான குறிப்புகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், பிஸியான வாழ்க்கை முறையில், நாம் அதை கடைபிடிக்க மறந்துவிடுகிறோம், அத்துடன் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறோம். எனவே நீங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்கள் எவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள், இது உடலில் அதிகாரிக்கும் இரத்த சர்க்கரையை எளிதாக கட்டுபடுத்த உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. எக்ஸ்ட்ரா கொழுப்பை குறைக்கவும்
பொரும்பாலான நோய் நம் உடலில் இருக்கும் அதிக கொழுப்பின் காரணமாகவே ஏற்படுகின்றன. உங்களின் உடல் எடையும் அதிகரித்திருந்தால், அதை படிப்படியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும், ஏனெனில் இதன் காரணமாக இரத்த சர்க்கரையை அதிகரிப்பதில் சிக்கல் உள்ளது. இது தவிர, பல பெரிய நோய்களின் பிடியிலும் நீங்கள் சிக்கிக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்


2. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் நோய்கள் உங்களைச் சூழ்ந்துவிடும், படிப்படியாக நீங்கள் பல பெரிய நோய்களுக்கு ஆளாக நேரிடும். பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கு இதுவே காரணம்.


3. ஆரோக்கியமான பொருட்களை உண்ணுங்கள்
ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான பொருட்களை எப்போதும் உட்கொள்ள வேண்டும், கடுமையான இரத்த சர்க்கரை நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், நிச்சயமாக புரதம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள், இது உங்களுக்கு நன்மை பயக்கும்.


இந்த 3 உணவுகளை எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை உங்க கட்டுப்பாட்டில் வந்திடும்


கோவைக்காய்: கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்காகவே படைக்கப்பட்ட அற்புத காய் என்றே கூறலாம். கோவைக்காயை ஜூஸாக அடித்து அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கட்டுப்படுத்திவிடும்.


தேன்காய்: தேன்காய் சர்க்கரையை மிக வேகமாகக் கட்டுக்குள் கொண்டுவரும். தொடர்ந்து 45 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவை சோதித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவில் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு மாற்றங்கள் தெரியும். 


கொய்யா: கொய்யா இலைகள் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கொய்யா இலைகள் நான்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதனோடு நிலவேம்பு கிடைத்தால் எடுத்துக் கொள்ளலாம்.இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கும். இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR