இளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகுபடுத்துவதற்காக போட்ட ஒரு ஊசியால் அவரின் உதடு பலூன் போன்று வீங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தை சேர்ந்த 29 வயதுடைய ரேசல் க்னப்பியர் என்ற இளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகு படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தனது தோழியின் வீட்டில் இருந்து உதட்டை அழகுபடுத்தும் ஊசி ஒன்றை அவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். 


இந்த ஊசியை போட்டதும் உடனே உதட்டில் ஐஸ் கட்டி வைக்கவேண்டும் என்றும் அவர் தோழி அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த வந்த ரேசல் க்னப்பியர் அந்த ஊசியை தனது உதட்டில் செலுத்தியுள்ளார். ஊசி போட்ட சில வினாடிகளில் அவரது உதடு வீங்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ந்து போன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைது சென்றுள்ளார்.




அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உதட்டிற்கு ஐஸ்கட்டி ஒத்தனம் செய்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது உதடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பதற்றத்தில் தனது தோழி சொன்னதை மறந்து தானும் டென்ஷனாகி மற்றவர்களையும் டென்ஷன் ஆக்கிவிட்டார் ரேச்சல்.


இருந்தாலும் அந்த நிமிடம் அவர் பயத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.