How To Regrow My Hair Fast: முடியின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயனுள்ள வீட்டு வைத்தியமாகும். இந்த தீர்வு முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவற்றை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. பெரும்பாலான மக்கள் முடி உதிர்வால் சிரமப்படுகின்றனர். எனவே அத்தகையவர்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க வீட்டு வைத்தியத்தை நாடுகின்றனர். அதேசமயம் சிலர் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் இயற்கையான முறையை முயற்சித்து, முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றுவதில் வெற்றி பெறுகிறார்கள். எனவே இப்போது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வீட்டு வைத்தியத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி


செய்முறை:
1. முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை (Amla Powder) எடுத்து அதில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
2. இந்த கலவையை குறைந்த தீயில் மெதுவாக சூடாக்கவும். எண்ணெய் பொருக்கும் சூட்டில் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதனால் நெல்லிக்காயின் பண்புகள் எண்ணெயில் நன்றாக கலந்துக் கொள்ளும்.


மேலும் படிக்க | Blood Sugar Control Tips: சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!


3. கலவையை தீயில் இருந்து அகற்றி, ஆறவிடவும்.
4. கலவை குளிர்ந்ததும், அதை உங்கள் விரல்களின் உதவியுடன் உங்கள் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் முடி வேர்களை எண்ணெய் சென்றடையும்.
5. கலவையை உங்கள் தலைமுடியில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
6. பிறகு உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.


என்னென்ன பலன்களை பெறலாம்:
1. முடி வளர்ச்சி: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது முடியின் வேர்களை வலுப்படுத்தி அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
2. பொடுகை நீக்கும்: தேங்காய் எண்ணெய் முடியின் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, பொடுகைக் குறைக்க உதவும்.
3. முடி வலிமை பெரும்: இந்த கலவை முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் கூந்தலை வலுவாகவும் அடர்த்தியாகவும் செய்கிறது.
4. கூந்தல் பளபளக்கும்: இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் முடிக்கு பளபளப்பை அளிக்கிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.


முக்கிய குறிப்பு:


1. அலர்ஜி பரிசோதனை செய்துப் பாருங்கள்: இந்த எண்ணெயை உங்கள் தலைமுடியில் பயன்படுத்துவதற்கு முன், உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதாவது சிறிய பேட்ச் டெஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.


2. தூய பொருட்களின் பயன்பாடு: நெல்லிக்காய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் தூய்மையான மற்றும் இயற்கையானதாக இருக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த விதையை வெறும் வயிற்றில் குடியுங்கள்! அப்புறம் மாற்றத்தை நீங்களே தெரிஞ்சிப்பீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ