இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சர்க்கரை நோய் தீவிர நோயாக உருவெடுத்துள்ள நிலையில், அதன் நோயாளிகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டியுள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தவுடன், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற கவலை வாழ்நாள் முழுவதும் இருக்கும். எனவே இருப்பினும், அதிகாலையில் எழுந்து ஸ்பெஷல் பானத்தை குடித்தால், உடல் நலம் சீராகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் பார்லி தண்ணீரை குடிக்கவும் 
பார்லி தண்ணீரைப் பற்றிப் பேசுகிறோம், காலையில் தூங்கி எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடித்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் ஆகுவதோடு நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள், அத்துடன் செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.


மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!


பார்லி தண்ணீரின் நன்மைகள்
நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் பார்லி நீரில் காணப்படுகின்றன. இதனுடன், பார்லியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக, நீரிழிவு நோய்க்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களின் அபாயமும் இது குறைகிறது.


பார்லி தண்ணீரை 2 வழிகளில் குடிக்கலாம். பார்லி தானியத்தை வடிகட்டியும், பழச்சாறுடனும் கலந்து குடிக்கலாம். பார்லி தண்ணீரில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால், இது எல்லா வகையிலும் நன்மை பயக்கும். எனவே நீங்கள் பார்லி தண்ணீரைக் குடிக்கும்போது, ​​​​அதில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளைத் தவிர, எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.


​எந்த பார்லி ஆரோக்கியமானது
பொதுவாக பார்லி உமி நீக்கப்பட்டு அல்லது பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைக்கும். பார்லி கரோட்ஸ் என்று சொல்லப்படும் உமி நீக்கப்பட்ட பார்லியானது பார்லியின் சுத்தமான தானிய வடிவங்களுள் ஒன்றாகும் . இதில் சாப்பிடுவதற்கு உகந்ததல்லாத வெளிப்புற பகுதியை மட்டும் நீக்கி விடுவார்கள். அதாவது இந்த பார்லி குறைந்த பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. இது மென்று திண்பதற்கு சுலபமாகவும் , நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளதால் இதுவே ஆரோக்கியத்திலும் சிறந்ததாகும். 


பார்லி தண்ணீர் தயாரிக்கும் முறை
பார்லி தானியங்களை நன்றாக கழுவி அவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி விட்டு, 3 அல்லது 4 கப் தண்ணீரை சேர்க்கவும். பிறகு அந்த கலவையை கொதிக்க வட்டு கொதி வந்தவுடன் அதை மூடி வைக்கவும். அது மிருதுவாகும் வரை சிம்மில் ஒரு மணி நேரம் பார்லியை வேக வைக்க வேண்டும். பிறகு அந்த கலவையை ஆற விடவும். ஆறிய பின்பு சல்லடையை கொண்டு கலவையை வடிகட்டவும்.அதை தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் எழுமிச்சைப்பழச்சாறு அல்லது தேன் கலந்து உட்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR