முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும் கருவளையங்களை விரட்ட சில எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2022, 10:21 AM IST
  • முகத்தின் சருமங்கள் மிகவும் சென்ஸிடிவ் ஆனது.
  • மிக எளிய 6 வீட்டு வைத்தியம்.
  • முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும்
முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்! title=

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கு கண்களுக்குக் கீழேயும் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் தோற்றத்தை கெடுக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல் போன்ற பல போன்ற காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன. 

முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும் கருவளையங்களை விரட்ட சில எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் சரியான நேரத்தில் கருவளையத்திற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், அது உங்கள் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். இரசாயன அடிப்படையிலான மருந்துகளால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றாலும், முகத்தின் சருமங்கள் மிகவும் சென்ஸிடிவ் ஆனது என்பதால் வீட்டு வைத்தியம் மிகவும் சிறந்தது. இதற்கு 6 வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.

ALSO READ | Brain Health: மூளை நரம்பு பாதிப்பின் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்!

1. தக்காளி

கருவளையங்களில் இருந்து விடுதலை பெற தக்காளி ஒரு சஞ்சீவி போல் செயல்படுவதோடு, சருமத்தை மென்மையாக்குகிறது. ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களுக்கு அருகில் கருவளையங்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும். இது தவிர தக்காளி ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் என தினமும் குடித்து வந்தால் கருவளையம் நீங்க அது மேலும் உதவிடும்.

2. உருளைக்கிழங்கு

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுக்கவும். சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருமையான வட்டத்தில் தடவ வேண்டும். உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்த துணியால் கண்களை சுற்றி கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
  
3. குளிர்ச்சியான தேநீர் பைகள்

குளிர்ச்சியான தேநீர் பைகள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும் நீக்கும். தேநீர் பையை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடி அந்த டீ பேக்கை கச்ருவளையத்தில் வைக்கவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

ALSO READ | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!

4. குளிர்ச்சியான பால்

குளிர்ச்சியான பால் (Milk) கருவளையத்தை நீக்குகிறது என்பதோடு, கண்கள் மற்றும் தோலுக்கு நன்மை பயக்கும். குளிர்ந்த பாலை பருத்தி துணியில் ஊறவைத்து, கண்களின் கருவளையத்தில் வைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

5. ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாறு மூலம் கருவளையங்களையும் நீக்கலாம். ஆரஞ்சு (Orange) சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் பயன்படுத்துவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.

6.யோகா/தியானம்

மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது. இந்நிலையில், யோகா மற்றும் தியானமும் கருவளையங்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News