Home Remedies For High Blood Pressure: இந்த நவீன உலகில் உலக மக்களை ஆட்கொண்டுள்ள நோய்களில் உயர் இரத்த அழுத்தமும் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக, இன்று பலர் இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளணர். உயர் இரத்த அழுத்தம் ஒரு தீவிரமான பிரச்சனையாகும். இதனால் இதய நோய், சிறுநீரகம் தொடர்பான நோய்களும் மற்றும் இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி, அதிகரித்த இரத்த அழுத்தம் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால் உயர் இரத்த அழுத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். இதற்கு முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையிலும் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, பலர் பல வித மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். எனினும், இதை சரி செய்ய சில இயற்கையான வழிகளும் உள்ளன. உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


பூண்டு பயன்பாடு


பூண்டு (Garlic) சமையலில் பொதுவாக பயன்படும் ஒன்று, பூண்டு உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பூண்டை உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர இதில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.


எலுமிச்சை


உயர் இரத்த அழுத்தம் இருந்தால், ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரில் அரை எலுமிச்சை (Lemon) சாற்றை பிழிந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடிக்கவும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கிறது.


கருப்பு மிளகு


இரத்த அழுத்தம் அதிகரித்திருந்தால், அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு (Black Pepper) தூள் சேர்க்கவும். 2 மணி நேரம் ஆன பிறகு இதை உட்கொள்ளவும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கும் விரைவான சிகிச்சையளிக்கிறது.


மேலும் படிக்க | பித்தப்பை கற்கள் இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா? ஷாக்கிங் ஹெல்த் அலர்ட்!!


துளசி மற்றும் வேம்பு


உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க, 4-5 துளசி (Tulsi) இலைகள் மற்றும் 1-2 வேப்ப இலைகளை சேர்த்து அரைக்கவும். இதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.


நெல்லிக்காய்


ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் (Amla) சாறு மற்றும் சம அளவு தேன் கலந்து காலை மற்றும் மாலையில் உட்கொள்ளலாம். இது உயர் இரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Yoga For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சூப்பர் யோகாசனங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ