கோவிட் பாதிப்பு ஆராய்ச்சி: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 12 சதவீதம் பேருக்கு  "வைரல் ரீபவுண்ட்" ஏற்படுள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று வந்த சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் பரிசோதிக்கப்பட்டபோது, வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில், தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களில் 12 சதவிதத்தினருக்கும் கொரோனா அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளதாக, ஆகஸ்ட் 2ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு ப்ரீபிரிண்ட் (Preprint) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீபிரிண்ட் ஆய்வு என்பது, மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்படதா ஆய்வு என்று கூறப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு பாக்ஸ்லோவிட் மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸால் (COVID-19) மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் அறிகுறிகளை மீண்டும் அனுபவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி


'சிகிச்சையளிக்கப்படாத கோவிட்-19 நோய்த்தொற்றில் வைரஸ் மற்றும் அறிகுறி மீண்டும் வருதல்' என்ற தலைப்பிலான ஆய்வில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் அறிகுறிகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.


இந்த ஆய்வு தொடர்பாக பேசும் ஆய்வின் இணை ஆசிரியரான டாக்டர் டேவி ஸ்மித், "இது எல்லா நேரத்திலும் நடக்கும். கோவிட் சிகிச்சை அளிக்கப்படாதவர்களுக்கும் கோவிட் அறிகுறிகள் தோன்றுகிறது" என்று கூறுகிறார். டாக்டர் ஸ்மித், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், சான் டியாகோ மருத்துவப் பள்ளியின் தொற்று நோய்கள் மற்றும் உலகளாவிய பொது சுகாதாரத் தலைவராகவும் உள்ளார்.


மேலும் படிக்க | பீதியை கிளப்பும் Omicron BA.4, BA.5; உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை


கொரோனா வைரஸுக்கு சோதனை செய்தவர்களில் சுமார் 12 சதவிகிதம் பேருக்கு "வைரல் ரீபவுண்ட்" இருந்தது, அதாவது சோதனை எதிர்மறையான சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் நேர்மறை சோதனை செய்தனர். பாக்ஸ்லோவிட் எடுத்துக் கொண்டவர்களிடமிருந்தும் இவை கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு கூருகிறது.



அறிகுறிகள் திரும்புவது மோசமானதாக இருக்கலாம் அல்லது முதலில் வந்தது போல மோசமானதாக இல்லாமலும் இருக்கலாம் என்று டாக்டர் ஸ்மித் கூறினார். "பாதிப்பின் அளவு நோய்த்தொற்றின் இயற்கையான போக்கில் உள்ள மாறுபாடின் அடிப்படையில் அமையும்" என்று ஆய்வு கூறுகிறது. 


மே மாதத்தில், பேக்ஸ்லோவிட் ரீபவுண்டுகள் பற்றி மருத்துவர்களுக்கு தெரிவிக்க சுகாதார நிறுவனம் ஒரு சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டது. "SARS-CoV-2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) அறிகுறிகள் விரைவிலேயே மீண்டும் வருவது, நோய்த்தொற்றின் இயற்கையான வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கலாம், இது கோவிட் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் என்ற எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை" என்று பேக்ஸ்லோவிட் ரீபவுண்டுகள் பற்றி மருத்துவர்களுக்கு தெரிவிக்க சுகாதார நிறுவனம் வெளியிட்ட சுகாதார எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், சிகிச்சை அளிக்கப்படாத கோவிட் நோயாளிகளுக்கு மீண்டும் அறிகுறி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதாக என்பிசி நியூஸ் கூறுகிறது.


மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது


மேலும் படிக்க | COVID-19: BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ