Weight Loss Drinks: குளிர்காலத்தை விட கோடைக்காலத்தில் உடலை கூடுதல் கவனம் செலுத்தி பார்த்து கொள்ள வேண்டும். தற்போது பல இடங்களில் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சமயத்தில் அதிக சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சாப்பிடும் உணவுகள், சரியான தூக்கம் போன்றவை அவசியம். இல்லை என்றால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பொரித்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை. மேலும் கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உடலுக்கு தேவையான சில பானங்களையும் குடிக்க வேண்டும். இந்த சமயத்தில் உடலை எடையை குறைக்க சில பானங்களை காலையில் குடித்து வந்தால் போதும். எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!


எலுமிச்சை தண்ணீர்


காலையில் எழுந்ததும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை நீரை குடிப்பது உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. எலுமிச்சை நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்கி, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. 


பேல் சாறு


பேல் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. எனவே இந்த பேல் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸை கோடை காலத்தில் குடித்து வந்தால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும். குறிப்பாக இந்த பழம் உடல் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. இந்த பழம் அதிக குளிர்ச்சியை கொண்டுள்ளதால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் மற்றும் உடல் சூட்டை குறைகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து பிட்டாக இருக்க உதவுகிறது. 


மூலிகை டீ


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மூலிகை டீ குடிப்பது அதிகம் உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் காலையில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க மூலிகை டீ உதவுகிறது. இஞ்சி, கருப்பு மிளகு, புதினா சேர்க்கப்பட்ட மூலிகை டீயை தொடர்ந்து குடிக்கலாம். இருப்பினும் இந்த மூலிகை டீ ஒருசிலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆரம்பத்திலேயே இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அதிக அளவில் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்... வேற லெவலில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ