வெந்தய டீ மற்றும் மஞ்சள் பால்: உடல் எடையை குறைப்பது என்பது எளிதான செயல் அல்ல, இதற்காக கடுமையான உணவு மற்றும் கடுமையான உடற்பயிற்சியை நாட வேண்டும், சில நேரங்களில் இவை அனைத்தும் முயற்சி செய்தாலும், வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைவதில்லை, இதற்கு ஒரே காரணம் நாம் செய்யும் முயற்ச்சி ஏதேனும் தவறு செய்கிறோம் என்பது தான். அந்தவகையில் மிக சிலருக்கே நாம் இரவு உணவில் என்ன, எவ்வளவு சாப்பிடுகிறோம், மேலும் இதை பொறுத்து தான் உடல் எடை கூடும் என்பது தெரியும். அதனப்அடி  நீங்கள் இரவில் முழு அல்லது அதிக கலோரி உணவை சாப்பிட்டால், நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இதன் காரணமாக, தொப்பை கொழுப்பு வேகமாக அதிகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தவறினால் உடல் எடை கூடுகிறது
இந்த நிலையில் இது தொடர்பாக இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிகில் வாட்ஸின் கூற்றுப்படி, நீங்கள் உங்கள் எடையைக் குறைப்பதில் தீவிரமாக இருந்தால், இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் சாப்பிட்ட உடனேயே தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது தவிர, உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்களை நீங்கள் உட்கொள்ள வேண்டும், இதன் மூலம் நீங்கள் எளிதாக உடல் எடையை குறைத்துவிடலாம்.


மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி..! பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்


உடல் எடையை குறைக்க இந்த பானங்களை இரவில் குடிக்கவும்


1. மஞ்சள் பொடி பால்
மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன, எனவே இந்த மசாலாவைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மறுபுறம், பால் ஒரு முழுமையான உணவு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதில் கிட்டத்தட்ட அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு கலவையும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். அதனால் தான் இரவில் மஞ்சள் பொடி பால் குடிக்க வேண்டும்.


2. வெந்தய தேநீர்
நீங்கள் ஒல்லியான பெல்லியை பெற விரும்பினால், இன்றிலிருந்தே தினமும் இரவில் வெந்தய டீயைக் குடிக்கத் தொடங்குங்கள். நீங்கள் இரவில் நிறைய உணவை சாப்பிடும்போது, ​​​​சிறந்த செரிமானம் தேவைப்படுகிறது, இந்த விஷயத்தில் வெந்தய தேநீர் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் எடையைக் குறைக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த நீரை காலையில் வடிகட்டி, இரவில் சிறிது சூடு செய்த பின் குடிக்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மாம்பழ தோலை தூக்கி எறியவேண்டாம்..! அதில் இருக்கும் மருத்து குணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ