Health Benefits Jathikai or Nutmeg: இந்திய மசாலாப் பொருட்கள் உணவுகளுக்கு சுவையை சேர்ப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அத்தகைய மசாலா பொருட்களில் ஒன்று தான் ஜாதிக்காய். இந்த மசாலா பொருள் காலம் காலமாக இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்நிலையில் இன்று நாம் இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாதிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?


1- இந்த மசாலா பொருள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதம் முதல் பழங்கால மருந்துகள் வரை, ஜாதிக்காய் தூக்கம், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை மேம்படுத்துவதற்கு ஒரு சக்திவாய்ந்த மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது.


2- இது தவிர, பாலுடன் உட்கொள்ளும் இந்த ஜாதிக்காய் மசாலாவை எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக பயன்படுத்தலாம், இது செரோடோனின் என்ற ஹார்மோனை மேலும் வெளியிடுகிறது, அதனுடன் இவை தூக்கத்தைத் தூண்டவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.


மேலும் படிக்க | Garlic Benefits: தினசரி பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே


3- இது செரிமானத்தை அதிகரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் அஜீரணத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. அதேபோல இவை குமட்டலைக் குறைக்கிறது மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.


4- இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இது முன்கூட்டிய வயதை ஏற்படுத்துவதை தடுக்குவும். கூடுதலாக, ஜாதிக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை எதிர்த்துப் போராடவும், சருமத்தை அழகாக வைத்திருக்கவும் உதவுகின்றன.


5- இயற்கை மருந்துகளின் விரிவான தரவுத்தளத்தின் படி, ஜாதிக்காயை அளவுடன் உணவில் சேர்த்துக்கொண்டல் அது பாதுகாப்பானது. ஆனால் ஜாதிக்காயை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது, இவை குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.


6- மாதவிடாய் வலி மற்றும் சீரற்ற மாதவிடாயை அனுபவிக்கும் பெண்கள் ஜாதிக்காய் ஒரு சிறந்த பொருளாகும். ஜாதிக்காயில் காணப்படும் வீக்க எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதன் மூலமாக மாதவிடாய் சுழற்சியை சீரமைக்கும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்கள் தங்களுடைய உணவில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கொள்வதால் மாதவிடாய் வலியையும், சீரற்ற மாதவிடாய் பிரச்சனையையும் சமாளிக்க முடியும்.


7- உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் ஜாதிக்காய் சிறந்த தீர்வாகும். தூக்கத்தை தூண்டுவதற்கு உதவும் இந்த ஜாதிக்காய் இயற்கையான மயக்க பண்புகளை கொண்டுள்ளது. இதற்கு வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு பருகி வந்தால் தூக்கத்தின் தரம் மேம்படும். இதனால் காலை எழுந்ததும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ