Symptoms of High Cholesterol: 30 வயதில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் என்ன? இன்றைய நவீன காலத்தில், வயதானவர்களுக்கு மட்டும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் வருவதில்லை, இளைய வயதினரும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்தத்தில் ஒரு டெசிலிட்டருக்கு (mg/dL) 200 மில்லிகிராம் குறைவாக இருக்க வேண்டும். இதை விட அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் பல பிரச்சனைகள் வரத் தொடங்கும். கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது மாரடைப்பு, பக்கவாதம், இதய கோளாறுகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 வயதில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பல வகையான அறிகுறிகள் தோன்றும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தென்படும்? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


நெஞ்சு வலி


உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், நெஞ்சு வலி (Chest Pain) ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதய அடைப்புக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக மார்பில் வலி ஏற்படுகின்றது. இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.


சுவாசிப்பதில் சிரமம்


கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. ஏனெனில் இது இதய நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். கொலஸ்ட்ரால் காரணமாக, இரத்த ஓட்டம் குறையக்கூடும், இது சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேண்டுமா? காலையில் இந்த டீடாக்ஸ் பானங்களை குடிங்க போதும்


அதிக சோர்வு மற்றும் பலவீனம்


கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக உடல் உறுப்புகளில் இரத்தம் சரியாகச் செல்லாமல் பாதிப்பு ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில், நோயாளிகள் எந்த காரணமும் இல்லாமல் அதிகப்படியான பலவீனம் மற்றும் சோர்வை (Fatigue) அனுபவிக்கிறார்கள். மேலும், உடலில் ஆற்றல் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது. 


தோலில் மஞ்சள் நிற புடைப்புகள் தோன்றும்


உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், சில நேரங்களில் தோலில் மஞ்சள் நிற புடைப்புகள் (Yellow Skin) தோன்றத் தொடங்கும். இந்த வீக்கம் கொலஸ்ட்ரால் டெபாசிட்களாக இருக்கலாம். இவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.


கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், மார்டைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி கோலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? வெறும் வயிற்றில் இந்த சாறு குடித்தால் நிவாரணம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ