காலையில் ராஜாவைப் போல சாப்பிடு என்று கூறுவார்கள். அதாவது மனதிற்கு நிறைவாக சாப்பிட வேண்டும். காலை உணவு என்பது எல்லோருக்கும் மிக முக்கியமான உணவு. அன்றைய நாளுக்கான ஆற்றல் முழுவதையும் வழங்கக்கூடிய உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வதால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை உணவின் முக்கியத்துவம்


காலை உணவில் ஆரோக்கியமான உணவுகளை சரியான நேரத்தில் உண்பதால், ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மன உற்சாகமாக இருந்தால் தான், நமது பணிகளை திறம்பட செய்ய முடியும். சிறந்த காலை உணவு உடலுக்கான எரிசக்தியை சிறப்பாக அளிக்கிறது. காலை உணவு சிறந்ததாக இருந்தால், உடல் பருமன் முதல் மலச்சிக்கல் வரை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். செரிமானம் சிறப்பாக இருக்கும் என்பதால், பல வகை நோய்களிலிருந்து உடலை (Health Tips) காத்துக் கொள்ளலாம்.


காலை உணவை உண்பதற்கான ஏற்ற நேரம்


காலை உணவை உண்பதற்கு, மிகச் சரியான சிறந்த நேரம் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை. காலையில் குளுக்கோஸின் அளவு உடலில் குறைவாகவே இருக்கும். இதனால் அன்றைய நாளை தொடங்குவதற்கான ஆற்றலை காலை உணவு தருகிறது. ஒன்பது மணிக்குள் சாப்பிட முடியவில்லை என்றால், 10 மணிக்குள்ளாவது சாப்பிட வேண்டும். ஆனால் 7 மணி முதல் 9 மணி வரை சிறந்த நேரம். இதனால் உடலில் பெரிய மாற்றங்களை காணலாம்.


மேலும் படிக்க | குண்டு குண்டா இருக்குற தொப்பையை 15 நாட்களில் குறைக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்


காலை உணவுக்கு ஏற்ற உணவுகள்


காலை உணவு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீரான உணவாக இருக்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் இருப்பது நல்லது. இதனால், பசி கட்டுப்படுத்தப்படும். இட்லி சாம்பார் உணவு என்று உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இட்லி ஆவியில் வேகவைக்கப்படுவதால், அதில் கொழுப்பு என்பதே இல்லை. மேலும் சாம்பாரில் உள்ள பருப்பு புரோட்டின் நிறைந்தது. அதில் சேர்க்கப்படும் காய்கறிகளில், அனைத்து விதமான வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை அடங்கியிருக்கின்றன. நட்ஸ்கள் சேர்க்கப்பட்ட ஓட்ஸ் உணவும் காலை உணவிற்கு மிகவும் ஏற்றது. அதில் கூடுதலாக உங்களுக்கு பிடித்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஓட்ஸில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. அதோடு கார்போஹைட்ரேட்டும் மிகக் குறைவு. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. காலை உணவிற்கு மிக சிறந்தது. புரோட்டீன் நிறைந்த முட்டை, வயிறு நிறைந்த உணர்வை தருவதோடு, உடல் எடை குறையவும் உதவும்.


காலை உணவை ஏன் தவிர்க்கக்கூடாது


உடலை கட்டுப்படுத்த நினைக்கும் சிலர், காலை உணவை தவிர்க்க நினைக்கின்றனர். இது மிகவும் தவறானது. நாளை உணவு சாப்பிடாமல் இருக்கும் போது, உடலும் மனமும் மிகவும் சோர்வாக உணரப்படும் என்பதோடு, நம்ம எரியாமல் நாம் அதிகம் சாப்பிட்டு விடும் வாய்ப்பு அதிகம். அதிக பசி காரணமாக, மதிய உணவை அதிக அளவில் சாப்பிட்டு விடுவோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். மேலும் காலை உணவு தவிர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், அசிடிட்டி, வாயு போன்ற உடல்நல பாதிப்புகள் நம்மை வாழும் அபாயம் உள்ளது. எனவே காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான சிறந்த உணவை தேர்ந்தெடுத்து உண்பதால், நோயற்ற வாழ்வை வாழலாம்.


மேலும் படிக்க | 40 வயதுக்கு பின்னரும் நச்சுனு வாழ... இந்த பழத்தின் ஜூஸை அப்பப்ப குடிங்க!


பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ