ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்பான கவலைகளும், மூடநம்பிக்கைகளும் அதிகமாக இருக்கிறது. இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த கவலைக்கு நமது பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் ஆரோக்கியம் தொடர்பு கொண்டுள்ளது என்பதை மறக்கக்கூடாது. இது ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கைக்கும் பொருந்தும்.


உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களின் விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கும் என்பது பொதுவான உண்மை. மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில், ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்கள் இருக்கவேண்டும்.  


விந்தணுக்களின் எண்ணிக்கையை (Sperm Count) அதிகரிக்கும் சில எளிய உணவுப்பொருட்கள் நமது வீட்டிலேயே இருக்கிறது. எனவே, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.


ALSO READ | வெந்நீரில் குளிப்பதால் விந்தணுக்களில் பாதிப்பு


நமது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பு, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கிராம்பு பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கிராம்பு, செரிமான பிரச்சனைகள், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் நன்மை பயக்கிறது. 


கிராம்பில் உள்ள இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


கிராம்பு சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
நிபுணர்களின் கூற்றுப்படி, கிராம்புகளை தொடர்ந்து உட்கொண்டால், விந்தணு எண்ணிக்கை (Sperm Count) தொடர்பான பிரச்சனை குணமாகும். கிராம்பு சாப்பிடுவது உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


ALSO READ | வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே


இருப்பினும், ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை பாதிக்கும் என்பதால், கிராம்பை மிகவும் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.  
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். கிராம்பு செரிமான அமைப்பில் என்சைம்களின் சுரப்பை அதிகரிக்கிறது, இது அஜீரணத்தை ஏற்படுத்தாது.


இரவில் தூங்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிட்ட பிறகு, வெதுவெதுப்பான நீரில் சாப்பிட்டால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறன் அதிகரிக்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | ஆண்களுக்கு உகந்த ஆரஞ்சு! ஆரோக்கியமான விந்தணுவிற்கு உத்தரவாதம் தரும் பழம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR