கொல்கத்தா: குடியிறுப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனாதில் ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் மழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.


முச்சிப்பாரா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பத்திக்கன்னா சாலை பகுதியில் உள்ள குடியிறுப்பு பகுதியில் இன்று காலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இவ்விபத்தில் பலியானவர் குறித்த தகவல் தெரியவில்லை எனவும், அவர் கட்டிடத்திற்கு உரிமையாளரா அல்லது வெளிநாபரா என்று விசாரனை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இச்சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்து நடத்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், மீட்பு பணியில் தீயனைப்பு வீரர்களுடன் இணைந்து பேரிடர் மீட்பு குழுவினரும் பணியாற்றி வருவதாகவும் கொல்கத்த காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்!