டெல்லியில் ஒரே வீட்டில் 11 சடலங்களை போலீசார் கைப்பற்றிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி புராரி பகுதியில் தகவலின் பேரில் ஒரு வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அங்கு வசித்து வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில், ஒருவரின் உடல் தரையிலும் இருந்துள்ளது. இதனையடுத்து 7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது.