மும்பை: ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தொலைவில் சனிக்கிழமை காலை 6:36 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 10:33 மணிக்கு மும்பைக்கு (Mumbai) வடக்கே 91 கி.மீ தொலைவில் 2.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.


"2.7 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் 05-09-2020, 06:36:31 அன்று ஏற்பட்டது. Lat: 19.96 & Long: 72.83, ஆழம்: 5 கி.மீ, இடம்: மகாராஷ்டிரா (Maharashtra) மும்பையிலிருந்து வடக்கில் 98 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது” என என்.சி.எஸ் ட்வீட் செய்துள்ளது.


ALSO READ: கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு


கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவை தாக்கிய மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.


முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 10:33 மணியளவில் மும்பைக்கு வடக்கே 91 கி.மீ தொலைவில் 2.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.


பின்னர் அதே நாளில் இரவு 11:41 மணிக்கு, ரிக்டர் அளவில் 4.0 ரிக்டர் அளவிலான நடுக்கம் மகாராஷ்டிராவில் நாசிக்கிற்கு (Nashik) மேற்கே 98 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.


ALSO READ: “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!