புதுடெல்லி: டெல்லியில் மீண்டும் ஒரு கோர சம்பவம். குடிபோதையில் வேகமாக வாகனத்தை ஓட்டி ஏற்பட்ட விபத்தாள் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வடக்கு டெல்லியின் ஸ்வரூப் நகரில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த எஸ்எக்ஸ் 4 (SX4) கார் இரண்டு ஆட்டோக்கள் மீது வேகமாக மோதியதால், சம்பவ இடத்திலேயே இரண்டு ஆட்டோ டிரைவர்கள் உயிரிழந்தனர். ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படும் காயமடைந்தனர். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த விசாரணையில் ஸ்வரூப் நகர் காவல் நிலையம் ஈடுபட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் நடைபெற்று உள்ளது. முர்தால் பகுதியையில் இருந்து வேகமாக வந்த கார் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றுக்கொண்டு இருந்த ஆட்டோவில் கடுமையாக மோதியுள்ளது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் ஆட்டோக்கள் இரண்டும் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களான ஜெய் கிஷன் குப்தா (வயது 36 வயது), சஞ்சய் (வயது 40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் கூற்றுப்படி, காரில் 4-5 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக கூறினார்கள்.  காரை ஓட்டி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.