ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் அமைந்ததுள்ள பனார் வனப்பகுதில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் என்கவுண்டர் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது காஷ்மீரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பந்திப்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார். தற்போது தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.