ஜார்கண்ட்-ன்  டும்கா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்கண்ட்-ன்  டும்கா பகுதியில் கார் ஒன்றின் மீது லாரி மோதி விபத்துகுள்ளான சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.


விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. அதிகவேகத்தில் வாகனங்கள் சென்றதால் விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


விபத்தை குறித்துக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவளின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தோரை அருகாமையில் உள்ள மருத்துவமனையக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.


விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்தும், விபத்திற்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்!



(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)