வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதுவரை 368 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து சுமார் 1300 வீரர்கள் வரை மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றும் பணியிலும் அவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் பணியிலும் 38 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு உபகரணங்கள் இதர பொருட்களைக் கொண்டு சென்று சேர்க்கும் பணியில் 20 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொங்கி ஓடும் ஆறுகளால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் பலரும் மார்பளவு தண்ணீரில் தத்தளித்தபடி தங்கள வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 


இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில் கேரளா வெள்ள நிவாரண நிதியாக நடிகர் விகாரம் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 


இதற்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, நயன்தாரா, உளளிட்டோர் கேரளாவிற்கு நிதியுதவி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது!